யேர்மனி, பிரான்ஸ், சுவிஸ், நோர்வே, கனடா, சுவீடன், இத்தாலி, பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு மக்களுக்கு அழைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 06:56.44 AM GMT +05:30 ]
யேர்மனி, பிரான்ஸ், சுவிசிஸ், நோர்வே, பாரிஸ், பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களின் ஆதரவையும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்கள் கோரி நிற்கின்றார்கள்.
இத்தாலி வாழ் எம் தேசத்தின் உறவுகளே!சுவிசிஸ் ஐ.நா முன்பாக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இன்று (செவ்வாய்) மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வன்னியில் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2:00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள ஆர்ப்பாட்டம் காலத்தின் தேவை கருதி சில வேளைகளில் காலவரையறையற்ற போராட்டமாக மாறும் என்பதால் தமிழ் உறவுகள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் மக்கள் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஆரம்பித்துள்ள தன்னெழுச்சிப் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், அதிகளவிலான தமிழ் மக்கள் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யேர்மனியில் இன்று முதல் காலவரையறையற்ற போராட்டம் யேர்னியில் டுசுல்டோர்ப் பிரதான தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11:00 மணி முதல் காலவரையறையற்ற ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வன்னியில் பாரிய மனித அவலத்தின் மத்தியில் தமிழின அழிப்பை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசுக்கு யேர்மனி அரசாங்கம் அழுத்தம் கொடுத்து போரை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற போராட்டங்களின் வரைசையில் யேர்மனியிலும் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி டுசல்டோவ் நாடாளுமன்றத்திற்கு (düsseldorf landtag) முன்பாக (தொடர்புகளுக்கு: (49) 1633125311)
நோர்வேயில் பிரதமர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் வன்னி மக்களின் அவலத்தைத் தடுத்து உடனடி போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தி நோர்வே பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
பிரதமர் தனது அலுவலகத்திற்கு முன்பாக காலை 10:00 மணியளவில் மக்கள் ஒன்றுகூடுமாறு நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
வன்னியிலுள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த முற்படுவதாக தகவல் வெளியாகி இருப்பதுடன், அவ்வாறு தாக்குதல் நடத்தினால் பல இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசு மீதான அனைத்துலக அழுத்தம் உடனடியாகப் பிரயோகிக்கப்பட்டு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், இதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் கிழர்ந்தெழ வேண்டும் எனவும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் நேற்று முன்னாள் (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு விடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
இது தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
எமது இனத்தை கொடிய அழிவில் இருந்து காத்திட, உடனடிப் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு நோர்வே அரசாங்கம் உரிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த அணி திரள்வோம்.
எமது சொந்த அலுவல்களை நாளை ஒதுக்கி வைத்து எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம். அனைவரும் வீதிக்கு இறங்குவோம் என்று அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(தலைமை அமைச்சர் அலுவலகமானது, VG நாளிதழ் அலுவலகம் மற்றும் Deichmanske bibliotek (தலைமை நூலகம்) ஆகியன அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் Akersgata 42, 0030 OSLO முகவரியில் அமைந்துள்ளது)
பாரிஸ் நகரின் இன்வலிட் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் முன்றலில் நேற்று பிற்பகல் 3:00 மணியில் இருந்து ஒன்றுதிரண்ட தமிழர்கள் அதனை தொடர் போராட்டமாக மாற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரெஞ்சு அரசாங்கம் முடிவு ஒன்றினை தெரியப்படுத்தும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் முழக்கங்களை எழுப்பியபடி எழுச்சியுடன் காணப்படுவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார்.
லண்டனில் தொடர்கிறது போராட்டம் இதேவேளையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து நேற்று திங்கட்கிழமை கிளர்ந்தெழுந்த தமிழ் மக்கள், வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முன்றலில் தொடர்ச்சியாக மகிந்த அரசாங்கத்தின் தமிழின இனப் படுகொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
கனடாவில். கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும்
உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும்
சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கனடிய அரசையும் கனடிய பிரதமர் ஸ்டீபன் காப்பரையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் நாள்தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
நாள்தோறும் காலை 7:00 மணிக்கு 1199 கென்னடி வீதியில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் Banquet மண்டபத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உரிய பேருந்துகள் புறப்படவுள்ளன.
பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர் எண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சுயமாக வாகன வசதி கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றனர்.
பேருந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
பேருந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020
ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925
சுவீடனில் சுவீடன் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்துக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
எமது தாயக உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் இன அழிப்பு போரில் இருந்து இருந்து காக்க, சுவீடன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இத்தாலி வாழ் எம் தேசத்தின் உறவுகளே! இனவாத அரசின் எறிகணை வீச்சிலும் எரிகுண்டு வீச்சிலும் எம்தேசமும் தேசத்தின் உறவுகளும் எரிந்து கொண்டிருக்கிறார்கள். அழிவுகளைக் கண்டு அழுது கொண்டிருக்கும் நேரமல்ல இது. வீதியில் இறங்கி குரல் கொடுத்து எம் மக்களை பாதுகாக்க சர்வதேசத்தின் முன் இறுதியாக ஒங்கி குரல் கொடுக்கும் இறுதிக்கணம் இது.
எம் தாயகத்தையும் தேசியத்தையும் சுதந்திரத்தையும் தாயகத்து உறவுகளையும் இழந்து நாம் தமிழர்களாக வாழ முடியுமா? தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசம் எங்கும் மக்கள் வீதியில் இறங்கி போராடும் இவ்வேளையில் இத்தாலி வாழ் தமிழீழ மக்களாகிய நாமும் இன்றே வீதிகளில் இறங்கி தொடர்ந்து குரல் கொடுப்போம். தேசத்தை அழிவில் இருந்து காப்போம்.
இடம் : பியாட்சா இன்டிபென்டென்சா
நேரம் : 15:00 மாலை
காலம் : 07-04-2009
அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.
சாவுக்குள் வாழும் எம் சந்ததிகளை காக்க.
பலெர்மோ வாழ் தமிழீழமக்கள
இன்று பிற்பகல் 2:00 மணியில் இருந்து தொடர்ச்சியாக இப்போராட்டம் நடைபெறவிருக்கின்றது.
இதில் சுவீடன் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம்.
[www.tamilwin.com]
Tuesday, April 7, 2009
[]தமிழினப் அழிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கனடா, ஜேர்மனி,பிரிட்டிஷ், பிரான்சில் தொடர் போராட்டத்திற்கு அழைப்பு
தமிழினப் அழிப்பை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்சில் தொடர் போராட்டத்திற்கு அழைப்பு
[செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 09:05 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்]
சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப் படுகொலையை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தி அங்கு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் தொடர் மக்கள் எழுச்சி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
கனடாவில்...
கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும்
உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும்
சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கனடிய அரசையும் கனடிய பிரதமர் ஸ்டீபன் காப்பரையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் நாள்தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
நாள்தோறும் காலை 7:00 மணிக்கு 1199 கென்னடி வீதியில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் Banquet மண்டபத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உரிய பேருந்துகள் புறப்படவுள்ளன.
பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர் எண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சுயமாக வாகன வசதி கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றனர்.
பேருந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
பேருந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020
ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925
ஜேர்மனியில்...
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின படுகொலையைத் தடுத்து நிறுத்த ஜேர்மனிய அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜேர்மனி வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
ஜேர்மனி டுசல்டோவ் நாடாளுமன்றத்திற்கு (düsseldorf landtag) முன்பாக இன்று முற்பகல் 11:00 மணி தொடக்கம் தமிழினப் படுகொலையை உடன் தடுத்து நிறுத்த ஜேர்மனிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
எனவே யேர்மன் வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு எமது பலத்தை ஜேர்மனிய அரசிற்கு எடுத்துக்காட்டும் படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு: (49) 1633125311
பிரான்சில்...
சிறிலங்கா அரசாங்கத்தின் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி பிரான்சில் உள்ள புலம்பெயர் தமிழ்மக்களால் நேற்று திங்கட்கிழமை மாலையில் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகத்தின் முன்றலில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தெரிய வருவதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் போர்நிறுத்தம் கோரி பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் வெளிவிவாகர அமைச்சின் முன்றலில் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை நடத்தி வருகின்றனர்.
பாரிஸ் நகரின் இன்வலிட் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் முன்றலில் நேற்று பிற்பகல் 3:00 மணியில் இருந்து ஒன்றுதிரண்ட தமிழர்கள் அதனை தொடர் போராட்டமாக மாற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரெஞ்சு அரசாங்கம் முடிவு ஒன்றினை தெரியப்படுத்தும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் முழக்கங்களை எழுப்பியபடி எழுச்சியுடன் காணப்படுவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து நேற்று திங்கட்கிழமை கிளர்ந்தெழுந்த தமிழ் மக்கள், வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முன்றலில் தொடர்ச்சியாக மகிந்த அரசாங்கத்தின் தமிழின இனப் படுகொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
[www.puthinam.com]
பிரிட்டிஷ் பாராளுமன்ற முன்றலில் மாபெரும் ஆர்ப்பாட்டம்(பட இணைப்பு)
வீரகேசரி இணையம் 4/7/2009 11:00:11 AM - இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 3000க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர் பாராளுமன்ற அமர்வில் தற்போது கலந்து கொண்டிருக்கும் பிரித்தானிய அமைச்சர்கள் அல்லது உறுப்பினர்களில் எவராவது வெளியே வந்து தமது கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வரை பாராளுமன்ற முன்றலில் தொடர்ந்து இருக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் 1000 மேற்பட்டோர் தொடர்ந்தும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேலும் பலர் பிரித்தானியாவின் வெவ்வேறு இடங்களில் இருந்தும் பாராளுமன்ற முன்றலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டர்வகளில் சிலர் அருகிலுள்ள தேம்ஸ் நதியில் குதிக்கப் போவதாக அச்சுறுத்தியதையடுத்து அங்கே 4 உயிர்காப்பு படகுகள் கண்காணிப்புக்காக அமர்த்தப்பட்டதாகவும், எனினும் ஒருவர் குதிக்க முற்பட்ட சமயம் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தற்போது உள்நாட்டு விவகாரம் தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்று திங்கட்கிழமை தமிழ் மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால் பாராளுமன்றத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பொலிஸார் வாகனங்களைப் பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள வீதிகளை நோக்கி வரவிடாமல் வேறு வீதிகளினால் திருப்பி விடுகின்றனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்திற்கும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
[செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009, 09:05 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்]
சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப் படுகொலையை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தி அங்கு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் தொடர் மக்கள் எழுச்சி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
கனடாவில்...
கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும்
உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும்
சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கனடிய அரசையும் கனடிய பிரதமர் ஸ்டீபன் காப்பரையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் நாள்தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
நாள்தோறும் காலை 7:00 மணிக்கு 1199 கென்னடி வீதியில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் Banquet மண்டபத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உரிய பேருந்துகள் புறப்படவுள்ளன.
பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர் எண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சுயமாக வாகன வசதி கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றனர்.
பேருந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
பேருந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020
ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925
ஜேர்மனியில்...
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின படுகொலையைத் தடுத்து நிறுத்த ஜேர்மனிய அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜேர்மனி வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
ஜேர்மனி டுசல்டோவ் நாடாளுமன்றத்திற்கு (düsseldorf landtag) முன்பாக இன்று முற்பகல் 11:00 மணி தொடக்கம் தமிழினப் படுகொலையை உடன் தடுத்து நிறுத்த ஜேர்மனிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
எனவே யேர்மன் வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு எமது பலத்தை ஜேர்மனிய அரசிற்கு எடுத்துக்காட்டும் படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு: (49) 1633125311
பிரான்சில்...
சிறிலங்கா அரசாங்கத்தின் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி பிரான்சில் உள்ள புலம்பெயர் தமிழ்மக்களால் நேற்று திங்கட்கிழமை மாலையில் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகத்தின் முன்றலில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தெரிய வருவதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் போர்நிறுத்தம் கோரி பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் வெளிவிவாகர அமைச்சின் முன்றலில் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை நடத்தி வருகின்றனர்.
பாரிஸ் நகரின் இன்வலிட் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் முன்றலில் நேற்று பிற்பகல் 3:00 மணியில் இருந்து ஒன்றுதிரண்ட தமிழர்கள் அதனை தொடர் போராட்டமாக மாற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரெஞ்சு அரசாங்கம் முடிவு ஒன்றினை தெரியப்படுத்தும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் முழக்கங்களை எழுப்பியபடி எழுச்சியுடன் காணப்படுவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து நேற்று திங்கட்கிழமை கிளர்ந்தெழுந்த தமிழ் மக்கள், வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முன்றலில் தொடர்ச்சியாக மகிந்த அரசாங்கத்தின் தமிழின இனப் படுகொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
[www.puthinam.com]
பிரிட்டிஷ் பாராளுமன்ற முன்றலில் மாபெரும் ஆர்ப்பாட்டம்(பட இணைப்பு)
வீரகேசரி இணையம் 4/7/2009 11:00:11 AM - இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 3000க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர் பாராளுமன்ற அமர்வில் தற்போது கலந்து கொண்டிருக்கும் பிரித்தானிய அமைச்சர்கள் அல்லது உறுப்பினர்களில் எவராவது வெளியே வந்து தமது கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வரை பாராளுமன்ற முன்றலில் தொடர்ந்து இருக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் 1000 மேற்பட்டோர் தொடர்ந்தும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேலும் பலர் பிரித்தானியாவின் வெவ்வேறு இடங்களில் இருந்தும் பாராளுமன்ற முன்றலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டர்வகளில் சிலர் அருகிலுள்ள தேம்ஸ் நதியில் குதிக்கப் போவதாக அச்சுறுத்தியதையடுத்து அங்கே 4 உயிர்காப்பு படகுகள் கண்காணிப்புக்காக அமர்த்தப்பட்டதாகவும், எனினும் ஒருவர் குதிக்க முற்பட்ட சமயம் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தற்போது உள்நாட்டு விவகாரம் தொடர்பான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நேற்று திங்கட்கிழமை தமிழ் மாணவர்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால் பாராளுமன்றத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பொலிஸார் வாகனங்களைப் பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள வீதிகளை நோக்கி வரவிடாமல் வேறு வீதிகளினால் திருப்பி விடுகின்றனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்திற்கும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
[]ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்த தூத்துக்குடி முத்துக்குமரன்
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்த தூத்துக்குடி முத்துக்குமரன் மரணம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 08:49.48 AM GMT +05:30 ]
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் சென்னையில தீக்குளித்து மரணமானார்
இலங்கை ராணுவத்தால் அப்பாவி ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் சென்னையில் இன்று காலையில் தீக்குளித்த இளைஞர், மருத்துவமனையில் மரணமடைந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு இன்று காலை 10 லிட்டர் மண்எண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.
திடீரென, ''ஈழத்தமிழர்களை வாழ்த்தி கோஷமிட்டும், அவர்களை காப்பாற்ற கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து கோஷமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.
அங்கு நின்றிருந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி மரணமடைந்தார்.
தீக்குளித்து இறந்த முத்துக்குமரன், சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புலியநல்லூர் என்ற கிராமம் ஆகும். 'மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர், 'பெண்னே நீ|| என்ற நிகழ்ச்சி தொகுப்பளாரும் தயாரிப்பாளரும் ஆவார்.
தியாகி முத்துக்குமாரை நினைந்து பிரான்ஸில் மக்கள் அஞ்சலி
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2009, 02:52.21 AM GMT +05:30 ]
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம் பாக்கத்திலுள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பாக, நேற்று வியாழக்கிழமை காலை, பத்திரிகையாளரான முத்துக்குமார் அவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு விடிவு வரவேண்டும், தமிழ் மக்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழவேண்டும் போன்ற 11 அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து, தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, நூற்றுக் கணக்கான பிரஞ்சுத் தமிழ் மக்கள் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பாரிஸ் நகரத்திலுள்ள லாச்சப்பல் பகுதியில் ஒன்று கூடி, ஈழத்தமிழ் மக்களுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி. முத்துக்குமார் அவர்களை நினைந்து, அவரது உயிர்த் தியாகத்திற்கு தலை சாய்த்து அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.
இதே நேரம் இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் பாரிஸ் நகரத்திலுள்ள, உலக அதிசயங்களுள் ஒன்றான ஈகிள் கோபுர முன்றலில் உண்ணாநோன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசும், இராணுவமும் முனைப்புக் காட்டி நிற்கிறது. இந்த சம்பவங்களை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் வகையிலேயே, உலக அதிசயம் முன்பாக உண்ணா நோன்பு நடவடிக்கை ஓர் ஈழத்தமிழ் உணர்வாளரால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்காக உயிர்க்கொடை செய்த முத்துக்குமாருக்கு அரசியல் தலைவர்கள் வணக்கம்
[வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2009, 01:20 பி.ப ஈழம்] [ந.ரகுராம்]
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று தீக்குளித்து உயிர்க்கொடை செய்த இளைஞர் முத்துக்குமாருக்கு அரசியல் தலைவர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
முத்துகுமாரின் புகழுடலுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ், தலைவர் கோ.க.மணி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்
திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
திரைப்பட நடிகர் டி.இராஜேந்தர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலர் தமிழிசை சௌந்தரராஜன்
உட்பட ஏராளமானவர்கள் வணக்கம் செலுத்தினர்.
முத்துக்குமாரின் உயிர் தியாகத்தை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை உட்பட ஏராளமான தமிழ் அமைப்புக்கள் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளன.
முத்துக்குமாரின் புகழுடலுக்கு அனைத்துத் தரப்பினரும் வணக்கம் செலுத்துவதற்காக வசதியாக கொளத்தூர் வியாபாரிகள் சங்க கட்டடம் முன்பு பெரிய மேடை அமைக்கப்பட்டது.
நேற்றிரவு அந்த மேடைக்கு முத்துக்குமாரின் புகழுடல் எடுத்து வரப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து முத்துக்குமாரின் புகழுடலுக்கு இன்று வணக்கம் செலுத்தினர். செங்கல்பட்டில் 7 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்களும் வணக்கம் செலுத்தினர்.
இதேபோல் பல்வேறு கட்சித் தலைவர்கள் முத்துக்குமாரின் புகழுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
விஜயகாந்த் கட்சி சார்பில் சுதீஷ் 100 பேருடன் வந்து மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினார்.
முத்துக்குமாரின் உயிர் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொளத்தூர், பெரம்பூரில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
இன்று மாலை முத்துக்குமாரின் புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்த தூத்துக்குடி முத்துக்குமரன் மரணம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 08:49.48 AM GMT +05:30 ]
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் சென்னையில தீக்குளித்து மரணமானார்
இலங்கை ராணுவத்தால் அப்பாவி ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் சென்னையில் இன்று காலையில் தீக்குளித்த இளைஞர், மருத்துவமனையில் மரணமடைந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு இன்று காலை 10 லிட்டர் மண்எண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.
திடீரென, ''ஈழத்தமிழர்களை வாழ்த்தி கோஷமிட்டும், அவர்களை காப்பாற்ற கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து கோஷமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.
அங்கு நின்றிருந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி மரணமடைந்தார்.
தீக்குளித்து இறந்த முத்துக்குமரன், சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புலியநல்லூர் என்ற கிராமம் ஆகும். 'மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர், 'பெண்னே நீ|| என்ற நிகழ்ச்சி தொகுப்பளாரும் தயாரிப்பாளரும் ஆவார்.
எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக்கொண்டேன்.
வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன்.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.
அண்ணன் பிரபாகரனுக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள். திருமாவளவனுக்கும் தகவல் கொடுங்கள். பிரபாகரன் கில்லாடி. எப்படியாவது நான் எரிந்து கொண்ட தகவலை தெரிந்து கொள்வார் என முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம்
போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.
ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது. 1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். 2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது. 3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். 4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். 5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும். 6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும். 7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும். 8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள். 9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது. 10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். 11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். 12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். 14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். என்றும் அன்புடன், அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன், கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99 அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி. இவ்வாறு அந்த துண்டுப்பிரசுர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
[www.tamilwin.com]
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 08:49.48 AM GMT +05:30 ]
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் சென்னையில தீக்குளித்து மரணமானார்
இலங்கை ராணுவத்தால் அப்பாவி ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் சென்னையில் இன்று காலையில் தீக்குளித்த இளைஞர், மருத்துவமனையில் மரணமடைந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு இன்று காலை 10 லிட்டர் மண்எண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.
திடீரென, ''ஈழத்தமிழர்களை வாழ்த்தி கோஷமிட்டும், அவர்களை காப்பாற்ற கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து கோஷமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.
அங்கு நின்றிருந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி மரணமடைந்தார்.
தீக்குளித்து இறந்த முத்துக்குமரன், சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புலியநல்லூர் என்ற கிராமம் ஆகும். 'மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர், 'பெண்னே நீ|| என்ற நிகழ்ச்சி தொகுப்பளாரும் தயாரிப்பாளரும் ஆவார்.
தியாகி முத்துக்குமாரை நினைந்து பிரான்ஸில் மக்கள் அஞ்சலி
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2009, 02:52.21 AM GMT +05:30 ]
தமிழ் நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம் பாக்கத்திலுள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முன்பாக, நேற்று வியாழக்கிழமை காலை, பத்திரிகையாளரான முத்துக்குமார் அவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு விடிவு வரவேண்டும், தமிழ் மக்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழவேண்டும் போன்ற 11 அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து, தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து, நூற்றுக் கணக்கான பிரஞ்சுத் தமிழ் மக்கள் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பாரிஸ் நகரத்திலுள்ள லாச்சப்பல் பகுதியில் ஒன்று கூடி, ஈழத்தமிழ் மக்களுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி. முத்துக்குமார் அவர்களை நினைந்து, அவரது உயிர்த் தியாகத்திற்கு தலை சாய்த்து அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.
இதே நேரம் இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் பாரிஸ் நகரத்திலுள்ள, உலக அதிசயங்களுள் ஒன்றான ஈகிள் கோபுர முன்றலில் உண்ணாநோன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசும், இராணுவமும் முனைப்புக் காட்டி நிற்கிறது. இந்த சம்பவங்களை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் வகையிலேயே, உலக அதிசயம் முன்பாக உண்ணா நோன்பு நடவடிக்கை ஓர் ஈழத்தமிழ் உணர்வாளரால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்காக உயிர்க்கொடை செய்த முத்துக்குமாருக்கு அரசியல் தலைவர்கள் வணக்கம்
[வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2009, 01:20 பி.ப ஈழம்] [ந.ரகுராம்]
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்று தீக்குளித்து உயிர்க்கொடை செய்த இளைஞர் முத்துக்குமாருக்கு அரசியல் தலைவர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
முத்துகுமாரின் புகழுடலுக்கு நேற்று வியாழக்கிழமை மாலை
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ், தலைவர் கோ.க.மணி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்
திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்
திரைப்பட நடிகர் டி.இராஜேந்தர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலர் தமிழிசை சௌந்தரராஜன்
உட்பட ஏராளமானவர்கள் வணக்கம் செலுத்தினர்.
முத்துக்குமாரின் உயிர் தியாகத்தை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை உட்பட ஏராளமான தமிழ் அமைப்புக்கள் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளன.
முத்துக்குமாரின் புகழுடலுக்கு அனைத்துத் தரப்பினரும் வணக்கம் செலுத்துவதற்காக வசதியாக கொளத்தூர் வியாபாரிகள் சங்க கட்டடம் முன்பு பெரிய மேடை அமைக்கப்பட்டது.
நேற்றிரவு அந்த மேடைக்கு முத்துக்குமாரின் புகழுடல் எடுத்து வரப்பட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து முத்துக்குமாரின் புகழுடலுக்கு இன்று வணக்கம் செலுத்தினர். செங்கல்பட்டில் 7 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்களும் வணக்கம் செலுத்தினர்.
இதேபோல் பல்வேறு கட்சித் தலைவர்கள் முத்துக்குமாரின் புகழுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.
விஜயகாந்த் கட்சி சார்பில் சுதீஷ் 100 பேருடன் வந்து மலர் வளையம் வைத்து வணக்கம் செலுத்தினார்.
முத்துக்குமாரின் உயிர் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொளத்தூர், பெரம்பூரில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
இன்று மாலை முத்துக்குமாரின் புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தீக்குளித்த தூத்துக்குடி முத்துக்குமரன் மரணம்
[ வியாழக்கிழமை, 29 சனவரி 2009, 08:49.48 AM GMT +05:30 ]
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் முத்துக்குமரன் சென்னையில தீக்குளித்து மரணமானார்
இலங்கை ராணுவத்தால் அப்பாவி ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், ஈழத் தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும் சென்னையில் இன்று காலையில் தீக்குளித்த இளைஞர், மருத்துவமனையில் மரணமடைந்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு இன்று காலை 10 லிட்டர் மண்எண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.
திடீரென, ''ஈழத்தமிழர்களை வாழ்த்தி கோஷமிட்டும், அவர்களை காப்பாற்ற கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து கோஷமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.
அங்கு நின்றிருந்த பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி மரணமடைந்தார்.
தீக்குளித்து இறந்த முத்துக்குமரன், சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புலியநல்லூர் என்ற கிராமம் ஆகும். 'மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிபவர், 'பெண்னே நீ|| என்ற நிகழ்ச்சி தொகுப்பளாரும் தயாரிப்பாளரும் ஆவார்.
எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக்கொண்டேன்.
வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன்.
இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.
அண்ணன் பிரபாகரனுக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள். திருமாவளவனுக்கும் தகவல் கொடுங்கள். பிரபாகரன் கில்லாடி. எப்படியாவது நான் எரிந்து கொண்ட தகவலை தெரிந்து கொள்வார் என முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.
உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.
ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.
மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.
உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம்
போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.
உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.
ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?
வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.
ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.
ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.
உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?
அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது. 1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். 2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது. 3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். 4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். 5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும். 6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும். 7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும். 8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள். 9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது. 10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். 11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். 12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். 14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். என்றும் அன்புடன், அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன், கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99 அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி. இவ்வாறு அந்த துண்டுப்பிரசுர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
[www.tamilwin.com]
Monday, April 6, 2009
[]பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை எதிர்த்து புலம்பெயர் தமிழர் கிளர்ந்தெழ வேண்டும் : பழ.நெடுமாறன்
பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை எதிர்த்து புலம்பெயர் தமிழர் கிளர்ந்தெழ வேண்டும் : பழ.நெடுமாறன்
வீரகேசரி இணையம் 4/6/2009 4:32:34 PM - வன்னியில் பாதுகாப்பு வலயம் மீது படையினர் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருமே கிளர்ந்தெழ வேண்டும் என பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் அவர்களே உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், தமிழ்-சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, இலங்கை அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தியத் தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. வன்னியில் இலங்கைப் படையினர் மேற்கொள்ளும் தாக்குதலின் பின்னணியிலும், நேரடியாகவும் இந்திய அரசாங்கமும், படையினரும் முழு அளவில் இருப்பதாக, தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் பழ.நெடுமாறனும், தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் ஒரேயொரு சிங்கள கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறியிருந்தனர். இந்த நிலையில் இலங்கை படையினரது தாக்குதல் முனைப்பு பற்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கருத்து வெளியிட்டுள்ள பழ.நெடுமாறன், தாக்குதல் முனைப்பு உண்மையாக இருந்தால், பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட நேரிடும் என்பதால், இதனைத் தடுத்து நிறுத்த உடனடியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு, மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இது தொடர்பான தார்மீகக் கடமை இருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, இலங்கை அரசை வலியுறுத்த அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
வீரகேசரி இணையம் 4/6/2009 4:32:34 PM - வன்னியில் பாதுகாப்பு வலயம் மீது படையினர் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருமே கிளர்ந்தெழ வேண்டும் என பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் அவர்களே உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், தமிழ்-சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, இலங்கை அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தியத் தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. வன்னியில் இலங்கைப் படையினர் மேற்கொள்ளும் தாக்குதலின் பின்னணியிலும், நேரடியாகவும் இந்திய அரசாங்கமும், படையினரும் முழு அளவில் இருப்பதாக, தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் பழ.நெடுமாறனும், தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் ஒரேயொரு சிங்கள கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறியிருந்தனர். இந்த நிலையில் இலங்கை படையினரது தாக்குதல் முனைப்பு பற்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கருத்து வெளியிட்டுள்ள பழ.நெடுமாறன், தாக்குதல் முனைப்பு உண்மையாக இருந்தால், பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட நேரிடும் என்பதால், இதனைத் தடுத்து நிறுத்த உடனடியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு, மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இது தொடர்பான தார்மீகக் கடமை இருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, இலங்கை அரசை வலியுறுத்த அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
[]இடம்பெயர்ந்து வந்தவர்கள் இரண்டாம்தர குடிமக்களா?
இடம்பெயர்ந்து வந்தவர்கள் இரண்டாம்தர குடிமக்களா?
வீரகேசரி வாரவெளியீடு 4/6/2009 12:11:53 PM - வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிர தேசத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகு திக்குள் வந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைத் தாண்டி விட்டதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக் களுக்கு நிம்மதியான வாழ்வும் நிலையான அமைதியும் கிடைக்கும் என்று அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது.ஆனால் இன்னொரு புறத்தில் இந்த மக் களை நிரந்தரமாகவே இரண்டாந்தரக் குடிமக் களாகப் பிரித்துக் காட்டும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை "புலிகளின் பிடியில் இருந்து தப்பி வரும் மக் கள்' என்ற அடைமொழியுடன் பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் அரசாங்கம் அதே வகையான தொரு நிலைக்குள்தான், இங்கும் தள்ளுகி றோம் என்பதை மறந்து விடுகிறது. வன்னியில் இருந்து வரும் மக்கள் வவுனி யாவிலும், யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட் டிருக்கின்ற முகாம்களுக்குள் மட்டுமே அடைக் கப்படுகின்றனர். இங்கே "அடைக்கப்படுகின்றனர்' என்ற பதம் சிறைகளில் அடைக்கப்படுவது என்ப தற்கு எந்தவிததிலும் குறைவானதாக இருக்க முடியாது. ஒரு சிறைக்குள் இருப்பவர்கள் வெளியாரு டன் தொடர்பு கொள்வதற்கு, வெளியே செல் வதற்கு, அல்லது சுதந்திரமாக நடமாடுவதற்கு எவ்வாறு தடுக்கப்பட்டிருப்பார்களோ, அது போன்ற நிலை தான் வன்னியில் இருந்து வந்த மக்களுக்கும் உள்ளது. இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாது. அவர்களின் உறவினர்கள் கூட உள்ளே சென்று பார்க்க முடியாதுள்ளது.ஐ.நா.வின் உதவித் திட்ட நிவாரணத்தைப் பெற்று சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அதற்குள் ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும். இதுவும் ஒரு சிறை வாழ்க்கை தான். சுற்றிவர இராணுவத்தினரும், பொலிஸா ரும் காவல். உள்ளேயும் அவர்கள் தாராளமாக நடமாடுவர். இந்த முகாம்களே இராணுவத்தின ரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன.இதுபற்றி சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக் கத் தொடங்கிய பின்னர் தான் இராணுவத்தின ரின் பொறுப்பில் இருந்து விடுவித்து மீள்குடி யேற்ற அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத் திருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. இது பெயரளவுக்குத் தான் இருக்குமே தவிர நிச்சயம் படைத்தரப்பின் இறுக்கமான கட்டுப் பாட்டுக்குள் தான் முகாம்கள் இருக்கும். வன்னியில் இருந்து வரும் மக்களிடையே புலிகள் மறைந்திருக்கலாம். அவர்கள் இங்கு வந்து தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு படையினர் செயற் படுவதாக அரசாங்கம் கூறுகிறது.ஆனால் ஒரு சில புலிகளைப் பிடிக்க அர சாங்கம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்க ளின் நலன்களை முடக்கிப் போட்டு அவர்க ளின் சுதந்திரமான அசைவுகளைக் கட்டுப்ப டுத்தி நடைப்பிணங்களாக்கி வைத்திருப்பது சரியானது தானா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் இடம்பெயர்ந்தோர் முகாம் கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பெரும் விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் படும் வேதனைகள் பற்றி சர்வதேச பிரதிநிதிகளே தமது கள ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் தனது இறுக்கமான போக்கில் இருந்து தளரத் தயாராக இல்லை. அமைச்சர்கள், அரசாங்கத் தோடு இணங்கிச் செயற்படும் சில அரசியல்வாதிகள் மட்டும் இடம்பெயர்ந்தோர் முகாம்க ளைப் பார்வையிட முடியும் என்ற நிலை தான் காணப்படுகிறது. ஆனால் இவர்களின் காதுக ளுக்குள் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் ஏறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்படியான பிரச்சினைகளை வெளியே சொல்வது அரசாங் கத்துக்கு, இலங்கை தேசத்துக் குச் செய்யும் துரோகமாக அவர்கள் பார்ப்பார்கள். வன்னியில் வாழ்ந்த மக் களை புலிகள் கட்டாயமாகத் தான் படைகளில் சேர்த்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அப்படி கட்டாய மாக ஆட்சேர்ப்பு செய்யப் பட்டு, தப்பி வந்தவர்களைக் கூட அரசாங்கம் வவுனியாவில் புலிகளாகத் தான் பார்க்கிறது. இதை விடப் பரிதாபம் புலிகள் 55வயதுக் குட்பட்டோருக்கு கட்டாய பயிற்சி கொடுத்த தாக அரசாங்கமே சொல்கிறது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்ட வயோதி பர்களைக் கூட அரசாங்கம் இடம்பெயர்ந் தோர் முகாம்களில் இருந்து வெளியே போக விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.கடந்த வாரம் தான் 60 வயதுக்கு மேற்பட் டோர் வெளியே சென்று வசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது இன்னமும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறாக இடம்பெயர்ந்து அரச கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களின் அடிப் படை உரிமைகள் மறுக்கப்பட்டு குறிப்பிட்ட முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டு வாழும் அவலம் தான் காணப்படுகிறது. இந்த அடைபட்ட வாழ்வு எதுவரை நீடிக் கும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என் பதற்கு யாரும் உறுதியான பதில் சொல்வதாகத் தெரியவில்லை. இந்தநிலையில் தான் அரசாங்கம் வன்னி யில் இருந்து வந்த மக்கள் அனைவருக்குமே விசேட அடையாள அட்டையை வழங்கப் போவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருக்கிறார்.இது அந்த மக்களை அரசாங்கம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த முற்படுகிறது என் பதற்கான அடையாளமாகவே தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்னர், வவுனியா வில் இருந்து கொழும்பு செல்வதற்கு தமிழ்மக் களுக்கு பாஸ் தேவைப்பட்டது. இதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக் கில் இவ்வாறான பாஸ் நடைமுறை சட்ட விரோதமானதென்று உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்திருந்தது. ஆனால் அதே பாஸ் நடைமுறையை அர சாங்கம் 1996 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவோ ருக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது.அதைவிட அங்கு விசேட அடையாள அட்டை நடைமுறையும் இருக்கிறது. இது பற்றி எவரும் வழக்குத் தாக்கல் செய்ய முனையவில்லை. இப்போது வன்னி மக்களுக்கும் விசேட அடையாள அட்டை கொடுத்து அவர்களை ஏனைய மக்களிடத்தில் இருந்து பிரித்துக் காட் டும் இரண்டாந்தரக் குடிமக்களாகப் பிரகட னப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கி யிருக்கிறது.அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை முக்கியமானதாக இருக்கும் போது அதற்கு மாறாக விசேட அடையாள அட் டையையும் வைத்திருக்க வேண்டுமென நிர்ப்பந்திப்பது குறிப்பிட்ட மக்களை தரக் குறைவாகப் பார்ப்பதற்கே வழிவகுக்கும்.யாழ்ப்பாணத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே விசேட அடையாள அட்டை யைப் பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டனர். 18வயதுக்கு உட்பட்டோரை படைகளில் சேர்த்தால் அது மிக மோசமான மனித உரிமை மீறலாக இருக்கும்போது 10வயதுச் சிறுவ னையே அடையாள அட்டையுடன் அலைய விடுவது மட்டும் மனித உரிமையை மதிக்கும் செயலாகுமா? தமிழ் மக்களை விடுவிப்பதற்காகப் போர் நடத்துவதாகவும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் வசந்தம் வீசும் என்றும் சொல்லிக் கொள்ளும் அரசாங்கம் அந்த மக்களை நிரந் தரமாகவே புலிகளாக நோக்க வைக்கும் ஒரு காரியத்தை இப்போது செய்து கொண்டிருக் கிறது. இடம் பெயர்ந்து வந்த மக்களை பிரித்துக் காட்டும் விசேட அடையாள அட்டையை நடைமுறைக்குக் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்ற நிலையில், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் எவருமே இது பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.இது ஒன்றே இடம்பெயர்ந்து வந்த மக்க ளின் துயரங்கள் எவ்வளவு தூரம் மறைக்கப் பட்ட நிலையில் இருகிறது என்பதற்கு போதுமான சாட்சி.
[www.virakesari.lk]
வீரகேசரி வாரவெளியீடு 4/6/2009 12:11:53 PM - வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிர தேசத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகு திக்குள் வந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைத் தாண்டி விட்டதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக் களுக்கு நிம்மதியான வாழ்வும் நிலையான அமைதியும் கிடைக்கும் என்று அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது.ஆனால் இன்னொரு புறத்தில் இந்த மக் களை நிரந்தரமாகவே இரண்டாந்தரக் குடிமக் களாகப் பிரித்துக் காட்டும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை "புலிகளின் பிடியில் இருந்து தப்பி வரும் மக் கள்' என்ற அடைமொழியுடன் பிரசாரத்துக்குப் பயன்படுத்தும் அரசாங்கம் அதே வகையான தொரு நிலைக்குள்தான், இங்கும் தள்ளுகி றோம் என்பதை மறந்து விடுகிறது. வன்னியில் இருந்து வரும் மக்கள் வவுனி யாவிலும், யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட் டிருக்கின்ற முகாம்களுக்குள் மட்டுமே அடைக் கப்படுகின்றனர். இங்கே "அடைக்கப்படுகின்றனர்' என்ற பதம் சிறைகளில் அடைக்கப்படுவது என்ப தற்கு எந்தவிததிலும் குறைவானதாக இருக்க முடியாது. ஒரு சிறைக்குள் இருப்பவர்கள் வெளியாரு டன் தொடர்பு கொள்வதற்கு, வெளியே செல் வதற்கு, அல்லது சுதந்திரமாக நடமாடுவதற்கு எவ்வாறு தடுக்கப்பட்டிருப்பார்களோ, அது போன்ற நிலை தான் வன்னியில் இருந்து வந்த மக்களுக்கும் உள்ளது. இடம்பெயர்ந்தோர் நலன்புரி முகாம்களில் இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாது. அவர்களின் உறவினர்கள் கூட உள்ளே சென்று பார்க்க முடியாதுள்ளது.ஐ.நா.வின் உதவித் திட்ட நிவாரணத்தைப் பெற்று சமைத்துச் சாப்பிட்டுவிட்டு அதற்குள் ளேயே முடங்கிக் கிடக்க வேண்டும். இதுவும் ஒரு சிறை வாழ்க்கை தான். சுற்றிவர இராணுவத்தினரும், பொலிஸா ரும் காவல். உள்ளேயும் அவர்கள் தாராளமாக நடமாடுவர். இந்த முகாம்களே இராணுவத்தின ரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தன.இதுபற்றி சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக் கத் தொடங்கிய பின்னர் தான் இராணுவத்தின ரின் பொறுப்பில் இருந்து விடுவித்து மீள்குடி யேற்ற அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத் திருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது. இது பெயரளவுக்குத் தான் இருக்குமே தவிர நிச்சயம் படைத்தரப்பின் இறுக்கமான கட்டுப் பாட்டுக்குள் தான் முகாம்கள் இருக்கும். வன்னியில் இருந்து வரும் மக்களிடையே புலிகள் மறைந்திருக்கலாம். அவர்கள் இங்கு வந்து தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கையோடு படையினர் செயற் படுவதாக அரசாங்கம் கூறுகிறது.ஆனால் ஒரு சில புலிகளைப் பிடிக்க அர சாங்கம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்க ளின் நலன்களை முடக்கிப் போட்டு அவர்க ளின் சுதந்திரமான அசைவுகளைக் கட்டுப்ப டுத்தி நடைப்பிணங்களாக்கி வைத்திருப்பது சரியானது தானா என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்தின் இடம்பெயர்ந்தோர் முகாம் கள் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பெரும் விசனம் வெளியிடப்பட்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் படும் வேதனைகள் பற்றி சர்வதேச பிரதிநிதிகளே தமது கள ஆய்வு அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் தனது இறுக்கமான போக்கில் இருந்து தளரத் தயாராக இல்லை. அமைச்சர்கள், அரசாங்கத் தோடு இணங்கிச் செயற்படும் சில அரசியல்வாதிகள் மட்டும் இடம்பெயர்ந்தோர் முகாம்க ளைப் பார்வையிட முடியும் என்ற நிலை தான் காணப்படுகிறது. ஆனால் இவர்களின் காதுக ளுக்குள் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள் ஏறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்படியான பிரச்சினைகளை வெளியே சொல்வது அரசாங் கத்துக்கு, இலங்கை தேசத்துக் குச் செய்யும் துரோகமாக அவர்கள் பார்ப்பார்கள். வன்னியில் வாழ்ந்த மக் களை புலிகள் கட்டாயமாகத் தான் படைகளில் சேர்த்ததாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அப்படி கட்டாய மாக ஆட்சேர்ப்பு செய்யப் பட்டு, தப்பி வந்தவர்களைக் கூட அரசாங்கம் வவுனியாவில் புலிகளாகத் தான் பார்க்கிறது. இதை விடப் பரிதாபம் புலிகள் 55வயதுக் குட்பட்டோருக்கு கட்டாய பயிற்சி கொடுத்த தாக அரசாங்கமே சொல்கிறது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்ட வயோதி பர்களைக் கூட அரசாங்கம் இடம்பெயர்ந் தோர் முகாம்களில் இருந்து வெளியே போக விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.கடந்த வாரம் தான் 60 வயதுக்கு மேற்பட் டோர் வெளியே சென்று வசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது இன்னமும் நடைமுறைக்கு வந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறாக இடம்பெயர்ந்து அரச கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களின் அடிப் படை உரிமைகள் மறுக்கப்பட்டு குறிப்பிட்ட முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டு வாழும் அவலம் தான் காணப்படுகிறது. இந்த அடைபட்ட வாழ்வு எதுவரை நீடிக் கும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும் என் பதற்கு யாரும் உறுதியான பதில் சொல்வதாகத் தெரியவில்லை. இந்தநிலையில் தான் அரசாங்கம் வன்னி யில் இருந்து வந்த மக்கள் அனைவருக்குமே விசேட அடையாள அட்டையை வழங்கப் போவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருக்கிறார்.இது அந்த மக்களை அரசாங்கம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த முற்படுகிறது என் பதற்கான அடையாளமாகவே தெரிகிறது. சில வருடங்களுக்கு முன்னர், வவுனியா வில் இருந்து கொழும்பு செல்வதற்கு தமிழ்மக் களுக்கு பாஸ் தேவைப்பட்டது. இதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக் கில் இவ்வாறான பாஸ் நடைமுறை சட்ட விரோதமானதென்று உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்திருந்தது. ஆனால் அதே பாஸ் நடைமுறையை அர சாங்கம் 1996 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறுவோ ருக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது.அதைவிட அங்கு விசேட அடையாள அட்டை நடைமுறையும் இருக்கிறது. இது பற்றி எவரும் வழக்குத் தாக்கல் செய்ய முனையவில்லை. இப்போது வன்னி மக்களுக்கும் விசேட அடையாள அட்டை கொடுத்து அவர்களை ஏனைய மக்களிடத்தில் இருந்து பிரித்துக் காட் டும் இரண்டாந்தரக் குடிமக்களாகப் பிரகட னப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கி யிருக்கிறது.அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை முக்கியமானதாக இருக்கும் போது அதற்கு மாறாக விசேட அடையாள அட் டையையும் வைத்திருக்க வேண்டுமென நிர்ப்பந்திப்பது குறிப்பிட்ட மக்களை தரக் குறைவாகப் பார்ப்பதற்கே வழிவகுக்கும்.யாழ்ப்பாணத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே விசேட அடையாள அட்டை யைப் பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டனர். 18வயதுக்கு உட்பட்டோரை படைகளில் சேர்த்தால் அது மிக மோசமான மனித உரிமை மீறலாக இருக்கும்போது 10வயதுச் சிறுவ னையே அடையாள அட்டையுடன் அலைய விடுவது மட்டும் மனித உரிமையை மதிக்கும் செயலாகுமா? தமிழ் மக்களை விடுவிப்பதற்காகப் போர் நடத்துவதாகவும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் வசந்தம் வீசும் என்றும் சொல்லிக் கொள்ளும் அரசாங்கம் அந்த மக்களை நிரந் தரமாகவே புலிகளாக நோக்க வைக்கும் ஒரு காரியத்தை இப்போது செய்து கொண்டிருக் கிறது. இடம் பெயர்ந்து வந்த மக்களை பிரித்துக் காட்டும் விசேட அடையாள அட்டையை நடைமுறைக்குக் கொண்டு வரப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்ற நிலையில், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் எவருமே இது பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.இது ஒன்றே இடம்பெயர்ந்து வந்த மக்க ளின் துயரங்கள் எவ்வளவு தூரம் மறைக்கப் பட்ட நிலையில் இருகிறது என்பதற்கு போதுமான சாட்சி.
[www.virakesari.lk]
[]வன்னியில் படையினர் எறிகணை, உலங்குவானூர்தி தாக்குதல்: இன்று (ஞாயிறு) 92 பொதுமக்கள் படுகொலை; 153 பேர் படுகாயம்
வன்னியில் படையினர் எறிகணை, உலங்குவானூர்தி தாக்குதல்: இன்று (ஞாயிறு) 92 பொதுமக்கள் படுகொலை; 153 பேர் படுகாயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2009, 02:28.23 PM GMT +05:30 ]
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களில் 30 சிறுவர்கள் உட்பட 92 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 30 சிறுவர்கள் உட்பட 92 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அருணாசலம் ரவி (வயது 37)
அழகு மீனா (வயது 49)
ஆறுமுகம் சசீலா (வயது 18)
லோகநாதன் நிசாந்தினி (வயது 09)
வைரமுத்து செல்வரத்தினம் (வயது 50)
லௌசீகன் லேகா (வயது 23)
விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)
பெரியாம்பிள்ளை சோபமலர் (வயது 67)
ரவிசங்கர் லவநிசா (வயது 02)
சத்தியானந்தன் சசிகலா (வயது 29)
வடிவேலு சந்திரலிங்கராசா (வயது 51)
ஐங்கரகுமார் நிதுசன வான்மதி (வயது 09)
ஜேம்ஸ் அந்தோனிப்பிள்ளை (வயது 50)
சின்னமணி இன்பநாதன் (வயது 47)
கந்தசாமி தியாகராசா (வயது 47)
தியாகராசா சங்கீதா (வயது 13)
வீரசிங்கம் தர்மலிங்கம் (வயது 56)
தில்லையம்பலம் திருச்செல்வம் (வயது 52)
ஜோசப் வேணுசன் (வயது 05)
தில்லைநாதன் சுமதி (வயது 38)
லோகநாதன் ஹேமா (வயது 32)
கலைவாணி (வயது 27)
லோகநாதன் லோஜிதா (வயது 09)
சிவதீபன் புஸ்பராணி (வயது 04)
சத்தியமூர்த்தி குணாளன் (வயது 09)
புலேந்திரன் விக்கினேஸ்வரி (வயது 42)
சி.கலைவாணன் (வயது 27)
துரைசிங்கம் (வயது 47)
கணபதிப்பிள்ளை சண்முகம் (வயது 61)
கஸ்தூரி (வயது 14)
விஜயரத்தினம் இரத்தினராசா (வயது 44)
முருகையா சிவனம்மா (வயது 64)
கருணாநிதி தர்சா (வயது 22)
மயில்வாகனம் குகேந்திரராசா (வயது 44)
கமலநாதன் ராதிகா (வயது 23)
மகேந்திரராசா கமலநாதன் (வயது 26)
குகேந்திரராசா ராஜலா (வயது 05)
கந்தசாமி தனுசன் (வயது 08)
ஆறுமுகம் கந்தசாமி (வயது 42)
சோதி (வயது 48)
தர்மேந்திரன் கார்த்திகா (வயது 06)
கே.தர்சன் (வயது 22)
எஸ்.சிவரூபன் (வயது 06)
வீ.இந்திரராஜா (வயது 40)
ஆர்.தியாகு (வயது 40)
கஸ்தூரி (வயது 16)
வீ.துரைசிங்கன் (வயது 47)
சத்தியமூர்த்தி குணாளன் (வயது 09)
வினோஜா (வயது 17)
கணபதிப்பிள்ளை சண்முகராஜா (வயது 58) விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)
வீரசிங்கம் தர்மசிங்கம் (வயது 52)
வீரசிங்கம் இந்திரராஜா (வயது 42)
சின்னமணி இன்பநாதன் (வயது 47)
கந்தையா சிவபாதம் (வயது 50)
சிவபாதம் மோகன்ராஜ் (வயது 25)
சிவபாதம் தர்மராஜ் (வயது 23)
மோகன்ராஜ் ராதிகா (வயது 24)
பாலச்சந்திரன் தர்சன் (வயது 08)
சத்தியமூர்த்தி குணாளன் (வயது 10)
நாகலிங்கம் பாலகிருஸ்ணன் (வயது 42)
மயில்வாகனம் குகேந்திரராசா (வயது 44)
குகேந்திரராசா ராஜனா (வயது 13)
அன்ரன் லோசன் ரேகா (வயது 03)
சின்னமணி இன்பராசா (வயது 47)
சசிகுமார் தேவபாக்கியம் (வயது 51)
ஐங்கரன் நிருசன் வான்மதி (வயது 09)
தில்லையம்பலம் திருச்செல்வம் (வயது 04)
சிவதீபன் புஸ்பராணி (வயது 32)
குகேந்திரராசா (வயது 46)
விஜயரட்ணம் இந்திரராசா (வயது 46)
மரியநாயகம் கதீசன் (வயது 21)
பாலகுமார் பாதூசன் (வயது 05)
மயில்வாகனம தேவநேசன் (வயது 14)
கனியமுதன் கவிஞன் (வயது 16)
வைரமுத்து காருண்யன் (வயது 12)
வைரவன் துரைசிங்கம் (வயது 42)
காந்தி மதியமலர் (வயது 29)
கலாதீபன் விதுசனா (வயது 08)
தேவன் பவிசா (வயது 09) 80
கண்ணாளன் காவியா (வயது 13)
வேணுகாந்தன் யோகாம்பாள் (வயது 40)
கலைத்தேவன் ரேணுகா (வயது 35)
இன்பநாதன் சின்னராசா (வயது 44)
அந்தோனி ஜோசப் மரியநாயகம் (வயது 52)
கதிர்வேலு மருதம்மா (வயது 52)
கதிரித்தம்பி பவிசனா (வயது 11)
நாகமணி துசாந்தன் (வயது 12) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
[www.tamilwin.com]
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2009, 02:28.23 PM GMT +05:30 ]
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்றும் நடத்திய எறிகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களில் 30 சிறுவர்கள் உட்பட 92 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளான அம்பலவன்பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 30 சிறுவர்கள் உட்பட 92 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அருணாசலம் ரவி (வயது 37)
அழகு மீனா (வயது 49)
ஆறுமுகம் சசீலா (வயது 18)
லோகநாதன் நிசாந்தினி (வயது 09)
வைரமுத்து செல்வரத்தினம் (வயது 50)
லௌசீகன் லேகா (வயது 23)
விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)
பெரியாம்பிள்ளை சோபமலர் (வயது 67)
ரவிசங்கர் லவநிசா (வயது 02)
சத்தியானந்தன் சசிகலா (வயது 29)
வடிவேலு சந்திரலிங்கராசா (வயது 51)
ஐங்கரகுமார் நிதுசன வான்மதி (வயது 09)
ஜேம்ஸ் அந்தோனிப்பிள்ளை (வயது 50)
சின்னமணி இன்பநாதன் (வயது 47)
கந்தசாமி தியாகராசா (வயது 47)
தியாகராசா சங்கீதா (வயது 13)
வீரசிங்கம் தர்மலிங்கம் (வயது 56)
தில்லையம்பலம் திருச்செல்வம் (வயது 52)
ஜோசப் வேணுசன் (வயது 05)
தில்லைநாதன் சுமதி (வயது 38)
லோகநாதன் ஹேமா (வயது 32)
கலைவாணி (வயது 27)
லோகநாதன் லோஜிதா (வயது 09)
சிவதீபன் புஸ்பராணி (வயது 04)
சத்தியமூர்த்தி குணாளன் (வயது 09)
புலேந்திரன் விக்கினேஸ்வரி (வயது 42)
சி.கலைவாணன் (வயது 27)
துரைசிங்கம் (வயது 47)
கணபதிப்பிள்ளை சண்முகம் (வயது 61)
கஸ்தூரி (வயது 14)
விஜயரத்தினம் இரத்தினராசா (வயது 44)
முருகையா சிவனம்மா (வயது 64)
கருணாநிதி தர்சா (வயது 22)
மயில்வாகனம் குகேந்திரராசா (வயது 44)
கமலநாதன் ராதிகா (வயது 23)
மகேந்திரராசா கமலநாதன் (வயது 26)
குகேந்திரராசா ராஜலா (வயது 05)
கந்தசாமி தனுசன் (வயது 08)
ஆறுமுகம் கந்தசாமி (வயது 42)
சோதி (வயது 48)
தர்மேந்திரன் கார்த்திகா (வயது 06)
கே.தர்சன் (வயது 22)
எஸ்.சிவரூபன் (வயது 06)
வீ.இந்திரராஜா (வயது 40)
ஆர்.தியாகு (வயது 40)
கஸ்தூரி (வயது 16)
வீ.துரைசிங்கன் (வயது 47)
சத்தியமூர்த்தி குணாளன் (வயது 09)
வினோஜா (வயது 17)
கணபதிப்பிள்ளை சண்முகராஜா (வயது 58) விசுவலிங்கம் கனகரத்தினம் (வயது 65)
வீரசிங்கம் தர்மசிங்கம் (வயது 52)
வீரசிங்கம் இந்திரராஜா (வயது 42)
சின்னமணி இன்பநாதன் (வயது 47)
கந்தையா சிவபாதம் (வயது 50)
சிவபாதம் மோகன்ராஜ் (வயது 25)
சிவபாதம் தர்மராஜ் (வயது 23)
மோகன்ராஜ் ராதிகா (வயது 24)
பாலச்சந்திரன் தர்சன் (வயது 08)
சத்தியமூர்த்தி குணாளன் (வயது 10)
நாகலிங்கம் பாலகிருஸ்ணன் (வயது 42)
மயில்வாகனம் குகேந்திரராசா (வயது 44)
குகேந்திரராசா ராஜனா (வயது 13)
அன்ரன் லோசன் ரேகா (வயது 03)
சின்னமணி இன்பராசா (வயது 47)
சசிகுமார் தேவபாக்கியம் (வயது 51)
ஐங்கரன் நிருசன் வான்மதி (வயது 09)
தில்லையம்பலம் திருச்செல்வம் (வயது 04)
சிவதீபன் புஸ்பராணி (வயது 32)
குகேந்திரராசா (வயது 46)
விஜயரட்ணம் இந்திரராசா (வயது 46)
மரியநாயகம் கதீசன் (வயது 21)
பாலகுமார் பாதூசன் (வயது 05)
மயில்வாகனம தேவநேசன் (வயது 14)
கனியமுதன் கவிஞன் (வயது 16)
வைரமுத்து காருண்யன் (வயது 12)
வைரவன் துரைசிங்கம் (வயது 42)
காந்தி மதியமலர் (வயது 29)
கலாதீபன் விதுசனா (வயது 08)
தேவன் பவிசா (வயது 09) 80
கண்ணாளன் காவியா (வயது 13)
வேணுகாந்தன் யோகாம்பாள் (வயது 40)
கலைத்தேவன் ரேணுகா (வயது 35)
இன்பநாதன் சின்னராசா (வயது 44)
அந்தோனி ஜோசப் மரியநாயகம் (வயது 52)
கதிர்வேலு மருதம்மா (வயது 52)
கதிரித்தம்பி பவிசனா (வயது 11)
நாகமணி துசாந்தன் (வயது 12) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
[www.tamilwin.com]
[]ஈழத்தில் அல்லலுறும் மக்களிடமிருந்து தாய்த் தமிழக மக்கள் மற்றும் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
ஈழத்தில் அல்லலுறும் மக்களிடமிருந்து தாய்த் தமிழக மக்கள் மற்றும் தலைவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 01:08.42 PM GMT +05:30 ]
எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.
குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.
எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.
எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!
இப்படிக்கு சாவின் விளிம்பில் உள்ள உங்கள் தொப்புள்கொடி உறவுகள்
[www.tamilwin.com]
[ திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 01:08.42 PM GMT +05:30 ]
எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.
குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.
எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.
எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!
இப்படிக்கு சாவின் விளிம்பில் உள்ள உங்கள் தொப்புள்கொடி உறவுகள்
[www.tamilwin.com]
[]"சரியான நேரத்தில் சரியான முடிவை தமிழக மக்கள் எடுப்பர்": காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தமிழக நாளேட்டின் கேள்விக்கு நடேசன் நம்பிக்கை
"சரியான நேரத்தில் சரியான முடிவை தமிழக மக்கள் எடுப்பர்": காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தமிழக நாளேட்டின் கேள்விக்கு நடேசன் நம்பிக்கை
[திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 07:29 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
ஈழத் தமிழர் பிரச்சினை காரணமாக காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஜனசக்தி' நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பார் பா. நடேசன், "எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றனர். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த 'ஜனசக்தி' நாளேட்டுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முழு விபரம்:
போர் நிறுத்தத்திற்காக ஒட்டுமொத்த தமிழகமும் மத்திய அரசுக்கு குரல் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லையே?... 21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் ஈழ மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தும் யாராலும் தடுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?...
பல காரணங்கள் உள்ளன. தடுக்கும் வல்லமை படைத்தவர்களாகவும், தார்மீகப் பொறுப்பு உடையவர்களாகவும் இருப்போர் அதனை உரிய முறையில் தடுக்கத் தவறியது ஒரு காரணம். நியாயமான அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை, இந்த உலகம் "பயங்கரவாதம்" எனச் சித்திரித்தது அடுத்த காரணம். "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போர்வையில் தமிழர்களைக் கொன்றழிக்கும் சிறிலங்கா அரசின் படைகளுக்கு இந்த உலகமே திரண்டு உதவிகள் செய்வது இன்னொரு காரணம். தனது தென் கோடியில் தனக்குப் பலமான பாதுகாப்பாய் - உண்மையான நண்பர்களாய் - எப்போதும் இருக்கின்ற தமிழீழத் தமிழர்களை இந்தியா அவ்வாறு கருதத் தவறியது இவற்றுள் முக்கிய காரணம். இப்போது நடந்து வரும் போரில் இதுவரையில் மொத்தம் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்?... வீடு இழந்தவர்கள் எத்தனை பேர்?... காயம் அடைந்தவர்கள் எவ்வளவு பேர்?...
நாங்கள் சொல்லுகின்ற தகவல்களை இப்போதைக்கு ஒரு பக்கத்தில் வைத்து விடுவோம். பக்க சார்பற்ற விதத்தில் ஐ.நா. சபையினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் - இப்போது அவர்களுக்குத் தெரியாமலேயே வெளியாகிவிட்டன. இந்த தகவல்களின் அடிப்படையில் - கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து மார்ச் 7 ஆம் நாள் வரையில் வன்னிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 2,683 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 7,241 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நாம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் - ஜனவரி முதல் நாளிலிருந்து மார்ச் 31 ஆம் நாள் வரை வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,001. மூன்றரை இலட்சம் வரையான மக்கள் - தமது வாழ்விடங்களை, வீடுகளை, தொழில்களை, கல்வியை, வாழ்க்கையை, எல்லாவற்றையுமே இழந்துவிட்டு - வெறும் கடற்கரை மணலில், வெறும் கூடாரங்களுக்குள் வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மனிதன் வாழுவதற்கு மிக மிக அடிப்படையான விடயங்களான உணவு, உடை, உறக்கம், சுகாதார வசதி, மருத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பும் நிம்மதியும் - எதுவுமே இந்த மக்களுக்கு இல்லை. உலக நாடுகள் பலவும் வலியுறுத்திய பிறகும் ஏன் பேச்சுவார்த்தைக்கு சிறிலங்கா அரசு முன்வரவில்லை?... அனைத்துலக நாடுகளும் சரி, இந்தியாவும் சரி உரிய முறையில் சிறிலங்கா மீது அழுத்தங்களைப் போட்டனவா, அல்லது போரை நிறுத்திவிட்டுப் பேச்சுக்களுக்கு வரக் கூடிய சூழ்நிலைக்கள் சிறிலங்கா அரசை உரிய முறையில் தள்ளினவா என்பதை இதைப் படிக்கின்ற மக்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். போரில் பெரிய அளவில் புலிகள் தாக்குதல் நடத்தாமல் பின்னோக்கி போய் இப்போது சிறு பகுதியில் மட்டுமே இருக்கிறார்களே..?
போர்க்களத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். போரியல் பரிமாணத்தில் நோக்கும் போது - கட்டுப்பாட்டு நிலப்பரப்பு சுருங்கிவிட்டது என்பதும் உண்மை தான்.
எமது போராட்டத்தின் காரணங்களையும், அடிப்படைகளையும், வரலாற்றையும் சரிவர உணர்ந்து கொள்ளாத, இந்தியா உட்பட, பல உலக நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுவதாலேயே, சிறிலங்கா படைகளால் இவ்வாறு முன்னேறி வர முடிகின்றது. அது தான் உண்மை.
ஆனால், சுதந்திர தமிழீழத்தை நோக்கிய எமது போராட்டம், உலக அரங்கில் - அனைத்துலக தமிழ்ச் சமூகத்தின் ஏகோபித்த ஆதரவை என்றுமில்லாத அளவுக்கு இப்போது பெற்றிருக்கின்றது. கோடிக்கணக்கான தமிழர்கள், எமது தேசத்தின் கொடிகளோடு உலக வீதிகளிலே இறங்கி எங்கள் உரிமைக்குரலை இப்போது எழுப்பி வருகின்றார்கள். உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கி, அதன் மனத்தை வெல்லும் பெரும் போராட்டத்தில் நாங்கள் இப்போது மாபெரும் வெற்றியை பெற்று வருகின்றோம்.
உண்மையில் எமது போராட்டம் நீங்கள் கூறுவது போல சிறு பகுதிக்குள் சுருங்கிவிடவில்லை; இப்போது தான் அது புதிய அரசியல் பரிமாணங்களைப் பெற்ற உலகப் பரப்பு எங்கும் என்றுமில்லாத அளவுக்கு வியாபித்து வருகின்றது. பொதுமக்கள் மீது தற்கொலைத் தாக்குதல் என்ற செய்தி, முஸ்லிம்கள் பங்கேற்ற மீலாது விழா ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது பற்றி...? ஒரு விடயத்தை நான் தெளிவாகச் சொல்லிவிடுகின்றேன். பொதுமக்களைக் கொல்வதனை இலக்காகக் கொண்டு எந்தவொரு கரும்புலித் தாக்குதல் நடவடிக்கையையும் எமது இயக்கம் எப்போதுமே நடத்தியது கிடையாது. அது எமது கொள்கையும் அல்ல. பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்திய இடங்களில் கூட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களே?...
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான தமிழினப் படுகொலைத் திட்டத்தையே இது அம்பலப்படுத்துகின்றது அல்லவா?..
அதுவாகவே ஒரு இனப்படுகொலை யுத்தத்தை நடாத்தி, தமது வாழ்விடங்களிலிருந்து மக்களை விரட்டி, பின்னர் அந்த மக்களை தானே "பாதுகாப்பு வலயம்" எனக் குறிப்பிட்டு ஒரு பிரதேசத்துக்குள் அடைக்கலம் புக வைத்துவிட்டு - அந்தப் பிரதேசத்தை ஒரு கொலைப் பொறியாக்கி, பீரங்கிகளாலும் வானூர்திகளாலும் குண்டுகளை வீசி தமிழர்களை வஞ்சகமாக கொல்கின்றது சிறிலங்கா அரசு.
சிறிலங்கா அரசு இவ்வாறு செய்வதில் எமக்கு எவ்வித ஆச்சிரியமும் இல்லை. ஆனால், இந்தக் கோரமான இன அழிப்புப் போருக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகள் அங்கீகாரத்தையும், ஆதரவையும் வழங்குகின்றன என்பதுதான் எமக்கு கவலையைத் தருகின்ற விடயமாகும். புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில்தான் இருக்கிறாரா?... அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார் என்று செய்திகள் வருகின்றனவே?... எமது தலைவரைப் பற்றி வெளிவருகின்ற அவ்வாறான செய்திகள் எல்லாம் வதந்திகளே. அவர் இங்கே எமது மக்களோடு வாழ்ந்த படியே தான் இந்தப் போரையும், போராட்டத்தையும் வழிநடத்திக்கொண்டிருக்கின்றார். உண்மையில் பிரபாகரன் அவர்களின் தற்போதைய மனநிலை என்ன?... தமிழக மக்களுக்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறார்?...
அவர் மிகுந்த உறுதியோடு போராட்டத்தை வழி நடாத்திக்கொண்டிருக்கின்றார். நெருக்கடிகள் சூழும் போது அசாதாரணமான உறுதியைப் பெறுவதும், கூடுதல் தன்னம்பிக்கையைப் பெறுவதுமே அவரது இயல்பு. தமிழக மக்களின் மீது அவர் எப்போதுமே பெரும் மதிப்பும் பேரன்பும் வைத்துள்ர். தமிழக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சி பெற்று இப்போது எமக்கு ஆதரவாய் இருப்பது, அவருக்கு மட்டுமல்ல, எமது போராளிகளுக்கும், எமது மக்களுக்கும் கூட நம்பிக்கையையும் துணிவையும் அளித்திருக்கின்றது. உலகத்தில் எங்கும் நடக்காத அளவுக்கு செய்தியாளர்களை சிறிலங்கா அரசு கொலை செய்து வருகிறதே. ஊடகங்களையும் அவர்கள் முடக்கி போட்டிருக்கிறார்களே..? பேச்சு சுதந்திரத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் வலியுத்துகின்ற அதேவேளையில், சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்தும் நிற்கின்ற உலக நாடுகளிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. "நாட்டின் இறையாண்மை" என்ற போர்வையில் ஊடகவியலாளர்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த அநீதியான நடவடிக்கை, தமிழின அழிப்புப் போரின் இன்னுமொரு பரிமாணமே அல்லாமல் வேறொன்றும் அல்ல. வித்தியாதரனை சிறையில் அடைத்ததும், ஏனைய தமிழ் ஊடகத்துறையினரை நேரடியாகவே மிரட்டிப் பணிய வைத்ததும், ஈழத் தமிழர்கள் அவலங்களைச் சொல்லும் தமிழகச் சஞ்சிகைகளை விநியோகித்ததற்காக 'பூபாலசிங்கம் புத்தகசாலை' உரிமையாளரை சிறையில் அடைத்ததும் - எல்லாமே, தமிழர் படுகொலை பற்றிய உண்மைகள் வெளியே வராமல் தடுப்பதற்காகச் செய்யப்பட்ட ஏதேச்சதிகார நடவடிக்கைகளே ஆகும். "சகோதர யுத்தம்" என்று திரும்ப திரும்ப முதல்வர் கருணாநிதி சொல்லிக்கொண்டிருக்கிறாரே... சகோதர யுத்தம் நடத்தப்படாமல் இருந்தால் ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும் என்கிறாரே...?
80-களின் நடுப்பகுதியில் தமிழர் போராட்ட இயக்கங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் ஒரு தவறான கையாடலை இந்தியா மேற்கொண்டது என்பதும், அதன் விளைவாக - "விடுதலைக்காக போராடுகின்றோம்" என வந்தவர்கள் பலர் ஈழத்தையே கைவிட்டுத் துரோகிகளாக மாறிப் போனதும், அதன் பின்னர் - இந்தியப் படை தமிழீழத்தில் இருந்த காலத்தில் அந்த துரோகிகள், அதுவரை சிங்களப் படைகளே செய்திருக்காத அளவுக்குக் கொடூரமாகத் தமிழ் மக்களையே கொன்று குவித்த வரலாறும், கலைஞர் ஐயா அவர்கள் அறியாதது அல்ல. பிரபாகரன் அவர்கள் எப்போதோ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஈழத்தில் நான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டி, அப்போதிருந்தே புலிகள் மீதான எங்கள் நம்பிக்கை பொய்த்து விட்டது என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே...?
எங்கள் தலைவர் அப்படிச் சொன்னதான நினைவுகள் எதுவும் எனக்கு இல்லை. அப்படிச் சொல்லியிருந்தாலும் அவர் தவறான ஒரு நோக்கத்தோடு அப்படிக் குறிப்பிட்டிருப்பார் என நான் நம்பவில்லை. அப்படியான பத்திரிகைப் பேட்டி எதுவும் இருந்தால், அதை எனக்குக் காட்டுவீர்களானால் எப்படியான கேள்விக்கு, எவ்வாறான சூழலில், என்ன நோக்கத்தோடு அவர் அப்படி சொல்லியிருப்பார் என்பதை வைத்து உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியும். ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து முத்துக்குமார், ரவிச்சந்திரன், அமரேசன், ரவி, மலேசியா ரவி என வரிசையாக தீக்குளிப்புகள் நடக்கின்றன. உங்கள் கருத்து? முதற்கண் - தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த எல்லோருக்கும் தமிழீழ மக்களின் சார்பிலும், எமது இயக்கத்தின் சார்பிலும் நான் தலைசாய்ந்து வணக்கம் செலுத்துகின்றேன். தம்மையே வருத்தி அவர்கள் செய்த அந்தத் தியாகங்கள் மனித மொழிகளால் மதிப்பளிக்க முடியாத அளவுக்கு ஒப்பற்றவை.
ஆனால் - உயிர்கள் உன்னதமானவை. அவை மிகப் பெறுமதியானவை. உயிர்கள் விலையாகக் கொடுக்கப்படுகின்ற போது அவற்றுக்கு நிகரான விளைவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்தத் தியாகங்களுக்கு மதிப்பளித்தும், தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் - சரியான முடிவுகளை எடுப்பதற்கு இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தவறுகின்றனர் என்பது தான் எமக்கு வேதனையை அளிக்கின்றது.
"காலம் கடந்த நீதி, அநீதிக்கு சமமானது" என்று முத்துகுமார் தனது இறுதி சாசனத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்னும் காலத்தை தாழ்த்திகொண்டு தானே இருக்கிறது இந்திய அரசு? முத்துக்குமாரும் நீங்களும் இந்தியாவின் குடிமக்கள். இந்தியாவைப் பற்றி உங்களில் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இன்னொருவர் பதில் சொல்லிவிட்டீர்கள். இதில் இனி நான் சொல்லுவதற்கு எதுவுமே இல்லை. புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்று சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி? தமது சொந்த வாழ்விடங்களில் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அவர்களது நிலத்தின் மீது ஒரு படையெடுப்பை நடத்தி, அந்த மக்களை விரட்டியடித்துவிட்டு, வளமான அவர்களது நிலங்களை நிரந்தரமாக ஆக்கிரமித்து வைத்து, நாசமாக்கி, சிங்களவர்களைக் குடியேற்றி, சிங்கள மயமாக்கி, தமிழர்களின் தேசியத் தன்மையைச் சிதைக்கவே முனைகின்றது சிறிலங்கா அரசு.
அதற்காகவே மக்களை நாம் மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் என்று அது கதைகளை உருவாக்கி, இந்த மண்ணிலிருந்து அனைத்துலக ஆதரவுடன் தமிழர்களை வெளியேற்றி நிரந்தர அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்க அது முனைகின்றது. "மனிதக் கேடயம்" என்ற இந்த வார்த்தைப் பிரயோகத்திற்குப் பின்னால் சிங்களப் பேரினவாதம் புதைத்து வைத்திருக்கும் ஆழமான அரசியல் சதியையும், இந்த சதி 61 ஆண்டு கால வரலாற்றில் பல பரிமாணங்களை எடுத்துள்ளது என்பதையும், அனைத்துலக சமூகம் மட்டுமன்றி தமிழினமும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்களை, அவர்களது போராளிகளான நாங்கள், எமது கேடயங்களாக வைத்திருக்க வேண்டிய தேவை தான் என்ன? இதுகாலம் வரையில் எதிர்நிலையில் இருந்த ஜெயலலிதா இப்போது மனம் மாறி உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஈழத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபா நிதியும் திரட்டப்பட்டிருக்கின்றது. இலங்கைக்குள்ளேயே தமிழர்களுக்கு தனி ஆட்சி வேண்டும் என்பதை வரவேற்கிறோம் என ஜெயலலிதா கூறுகின்றார். உங்கள் கருத்து?... தமிழீழ மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளையும், அவற்றை அடைவதற்கு உரிய தீர்வு என்ன என்பதையும் அவர் இப்போது புரிந்து வருகின்றார் என்பதையே இது காட்டுகின்றது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அவர் அளிக்கும் மதிப்பாகவும் இதனை நாம் கருத முடியும். எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எமது போராட்டத்தின் ஒரு நிபந்தனையற்ற காவலனாக விளங்கினார். அவர் உருவாக்கி வளர்த்த அந்த மரபு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்போது மீண்டும் உயிர்ப்புப் பெற்று தொடருகின்றது என்றே நாம் கருதுகின்றோம். தமிழீழ மக்களுக்கான அவர்களது இந்த ஆதரவு நிலை இனி எப்போதும் மங்காது நிலைத்து இருக்க வேண்டும் என்பதே தமிழீழ மக்களின் விருப்பம் ஆகும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாய் இருப்பது தொடர்பாக தான் பெருமைப்படுவதாக வைகோ அவர்கள் அண்மையில் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த ஆதரவாய் உள்ளார்கள். உங்கள் கருத்து? வைகோ அவர்கள் எமது போராட்டத்தின் சலசலப்பற்ற ஒரு துணைவனாக எப்போதுமே இருந்து வருகின்றார். தமிழீழ மக்களின் போராட்டம் தொடர்பான ஒரு தெளிவான, ஆழமான பரிந்துணர்வு அவருக்கு எப்போதும் இருக்கின்றது. அவரை எமது நண்பனாகப் பெற்றதற்காக நாங்களும் பெருமைப்படுகின்றோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்கள் எல்லோருமே தமிழீழ மக்களின் அவலங்கள் கண்டு நேர்மையாகவே துடிக்கின்றவர்கள். ஈழத் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெற்று, தம்மைத் தாமே ஆளும் சூழல் பிறக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியுடையவர்கள். இவ்வாறான அரசியல் தலைவர்களது ஆதரவு தான் தமிழீழ மக்களுக்கு நிம்மதியையும், எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையையம் தருகின்றது. சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளையும் தடவாளங்களையும் இந்திய அரசுதான் தந்து கொண்டிருக்கிறது என்று தொடந்து சொல்லப்பட்டு வந்த போது இந்திய அரசு அதை மறுத்து வருகிறதே? எமது போராட்டத்தை அழிப்பதற்காக இன்று நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா ஆற்றிய பங்கு மிகப் பெரியது என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கின்றார். அதுவே உங்கள் கேள்விக்கான பதிலாக அமைகின்றது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்கிற பேச்சு இருக்கிறது. ஆயுத உதவிகளை வழங்கி வரும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்திருக்கிறது. ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் கருத்து என்ன? தமிழகத்தின் 7 கோடி தமிழர்கள் தான் தமிழீழ மக்களின் பலம்; அவர்களே எமது நம்பிக்கை. தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்வே தமிழக மக்களின் முதன்மைச் சிந்தனையாகவும் இப்போது உள்ளது. அதற்காக - எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றார்கள். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு எப்போதும் உண்டு. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நீங்கள் வைத்திருக்கும் அரசியல் தீர்வு தான் என்ன? 1985 ஆம் ஆண்டில், பூட்டான் தலைநகர் திம்புவில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது சமரச முயற்சியின் போது ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் சார்பாக - தமிழர் பிரச்சினை தீர்வின் அடிப்படைகளாக "திம்பு கோட்பாடு" முன்வைக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் மத்தியத்துவத்தில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு - தமிழர்களின் தன்னாட்சி உரிமையையும், தமிழர் தாயகத்தையும் அங்கீகரிக்கின்ற ஒரு நியாயமான அரசியல் தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
[www.puthinam.com]
[திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009, 07:29 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
ஈழத் தமிழர் பிரச்சினை காரணமாக காங்கிரஸ் - தி.மு.க கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஜனசக்தி' நாளேட்டுக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பார் பா. நடேசன், "எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றனர். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்த 'ஜனசக்தி' நாளேட்டுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முழு விபரம்:
போர் நிறுத்தத்திற்காக ஒட்டுமொத்த தமிழகமும் மத்திய அரசுக்கு குரல் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லையே?... 21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் ஈழ மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தும் யாராலும் தடுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?...
பல காரணங்கள் உள்ளன. தடுக்கும் வல்லமை படைத்தவர்களாகவும், தார்மீகப் பொறுப்பு உடையவர்களாகவும் இருப்போர் அதனை உரிய முறையில் தடுக்கத் தவறியது ஒரு காரணம். நியாயமான அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை, இந்த உலகம் "பயங்கரவாதம்" எனச் சித்திரித்தது அடுத்த காரணம். "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போர்வையில் தமிழர்களைக் கொன்றழிக்கும் சிறிலங்கா அரசின் படைகளுக்கு இந்த உலகமே திரண்டு உதவிகள் செய்வது இன்னொரு காரணம். தனது தென் கோடியில் தனக்குப் பலமான பாதுகாப்பாய் - உண்மையான நண்பர்களாய் - எப்போதும் இருக்கின்ற தமிழீழத் தமிழர்களை இந்தியா அவ்வாறு கருதத் தவறியது இவற்றுள் முக்கிய காரணம். இப்போது நடந்து வரும் போரில் இதுவரையில் மொத்தம் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்?... வீடு இழந்தவர்கள் எத்தனை பேர்?... காயம் அடைந்தவர்கள் எவ்வளவு பேர்?...
நாங்கள் சொல்லுகின்ற தகவல்களை இப்போதைக்கு ஒரு பக்கத்தில் வைத்து விடுவோம். பக்க சார்பற்ற விதத்தில் ஐ.நா. சபையினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் - இப்போது அவர்களுக்குத் தெரியாமலேயே வெளியாகிவிட்டன. இந்த தகவல்களின் அடிப்படையில் - கடந்த ஜனவரி 20 ஆம் நாளில் இருந்து மார்ச் 7 ஆம் நாள் வரையில் வன்னிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 2,683 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 7,241 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நாம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் - ஜனவரி முதல் நாளிலிருந்து மார்ச் 31 ஆம் நாள் வரை வன்னியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 4,001. மூன்றரை இலட்சம் வரையான மக்கள் - தமது வாழ்விடங்களை, வீடுகளை, தொழில்களை, கல்வியை, வாழ்க்கையை, எல்லாவற்றையுமே இழந்துவிட்டு - வெறும் கடற்கரை மணலில், வெறும் கூடாரங்களுக்குள் வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மனிதன் வாழுவதற்கு மிக மிக அடிப்படையான விடயங்களான உணவு, உடை, உறக்கம், சுகாதார வசதி, மருத்துவம், எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பும் நிம்மதியும் - எதுவுமே இந்த மக்களுக்கு இல்லை. உலக நாடுகள் பலவும் வலியுறுத்திய பிறகும் ஏன் பேச்சுவார்த்தைக்கு சிறிலங்கா அரசு முன்வரவில்லை?... அனைத்துலக நாடுகளும் சரி, இந்தியாவும் சரி உரிய முறையில் சிறிலங்கா மீது அழுத்தங்களைப் போட்டனவா, அல்லது போரை நிறுத்திவிட்டுப் பேச்சுக்களுக்கு வரக் கூடிய சூழ்நிலைக்கள் சிறிலங்கா அரசை உரிய முறையில் தள்ளினவா என்பதை இதைப் படிக்கின்ற மக்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். போரில் பெரிய அளவில் புலிகள் தாக்குதல் நடத்தாமல் பின்னோக்கி போய் இப்போது சிறு பகுதியில் மட்டுமே இருக்கிறார்களே..?
போர்க்களத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். போரியல் பரிமாணத்தில் நோக்கும் போது - கட்டுப்பாட்டு நிலப்பரப்பு சுருங்கிவிட்டது என்பதும் உண்மை தான்.
எமது போராட்டத்தின் காரணங்களையும், அடிப்படைகளையும், வரலாற்றையும் சரிவர உணர்ந்து கொள்ளாத, இந்தியா உட்பட, பல உலக நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுவதாலேயே, சிறிலங்கா படைகளால் இவ்வாறு முன்னேறி வர முடிகின்றது. அது தான் உண்மை.
ஆனால், சுதந்திர தமிழீழத்தை நோக்கிய எமது போராட்டம், உலக அரங்கில் - அனைத்துலக தமிழ்ச் சமூகத்தின் ஏகோபித்த ஆதரவை என்றுமில்லாத அளவுக்கு இப்போது பெற்றிருக்கின்றது. கோடிக்கணக்கான தமிழர்கள், எமது தேசத்தின் கொடிகளோடு உலக வீதிகளிலே இறங்கி எங்கள் உரிமைக்குரலை இப்போது எழுப்பி வருகின்றார்கள். உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கி, அதன் மனத்தை வெல்லும் பெரும் போராட்டத்தில் நாங்கள் இப்போது மாபெரும் வெற்றியை பெற்று வருகின்றோம்.
உண்மையில் எமது போராட்டம் நீங்கள் கூறுவது போல சிறு பகுதிக்குள் சுருங்கிவிடவில்லை; இப்போது தான் அது புதிய அரசியல் பரிமாணங்களைப் பெற்ற உலகப் பரப்பு எங்கும் என்றுமில்லாத அளவுக்கு வியாபித்து வருகின்றது. பொதுமக்கள் மீது தற்கொலைத் தாக்குதல் என்ற செய்தி, முஸ்லிம்கள் பங்கேற்ற மீலாது விழா ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது பற்றி...? ஒரு விடயத்தை நான் தெளிவாகச் சொல்லிவிடுகின்றேன். பொதுமக்களைக் கொல்வதனை இலக்காகக் கொண்டு எந்தவொரு கரும்புலித் தாக்குதல் நடவடிக்கையையும் எமது இயக்கம் எப்போதுமே நடத்தியது கிடையாது. அது எமது கொள்கையும் அல்ல. பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்திய இடங்களில் கூட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களே?...
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான தமிழினப் படுகொலைத் திட்டத்தையே இது அம்பலப்படுத்துகின்றது அல்லவா?..
அதுவாகவே ஒரு இனப்படுகொலை யுத்தத்தை நடாத்தி, தமது வாழ்விடங்களிலிருந்து மக்களை விரட்டி, பின்னர் அந்த மக்களை தானே "பாதுகாப்பு வலயம்" எனக் குறிப்பிட்டு ஒரு பிரதேசத்துக்குள் அடைக்கலம் புக வைத்துவிட்டு - அந்தப் பிரதேசத்தை ஒரு கொலைப் பொறியாக்கி, பீரங்கிகளாலும் வானூர்திகளாலும் குண்டுகளை வீசி தமிழர்களை வஞ்சகமாக கொல்கின்றது சிறிலங்கா அரசு.
சிறிலங்கா அரசு இவ்வாறு செய்வதில் எமக்கு எவ்வித ஆச்சிரியமும் இல்லை. ஆனால், இந்தக் கோரமான இன அழிப்புப் போருக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகள் அங்கீகாரத்தையும், ஆதரவையும் வழங்குகின்றன என்பதுதான் எமக்கு கவலையைத் தருகின்ற விடயமாகும். புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில்தான் இருக்கிறாரா?... அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார் என்று செய்திகள் வருகின்றனவே?... எமது தலைவரைப் பற்றி வெளிவருகின்ற அவ்வாறான செய்திகள் எல்லாம் வதந்திகளே. அவர் இங்கே எமது மக்களோடு வாழ்ந்த படியே தான் இந்தப் போரையும், போராட்டத்தையும் வழிநடத்திக்கொண்டிருக்கின்றார். உண்மையில் பிரபாகரன் அவர்களின் தற்போதைய மனநிலை என்ன?... தமிழக மக்களுக்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறார்?...
அவர் மிகுந்த உறுதியோடு போராட்டத்தை வழி நடாத்திக்கொண்டிருக்கின்றார். நெருக்கடிகள் சூழும் போது அசாதாரணமான உறுதியைப் பெறுவதும், கூடுதல் தன்னம்பிக்கையைப் பெறுவதுமே அவரது இயல்பு. தமிழக மக்களின் மீது அவர் எப்போதுமே பெரும் மதிப்பும் பேரன்பும் வைத்துள்ர். தமிழக மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எழுச்சி பெற்று இப்போது எமக்கு ஆதரவாய் இருப்பது, அவருக்கு மட்டுமல்ல, எமது போராளிகளுக்கும், எமது மக்களுக்கும் கூட நம்பிக்கையையும் துணிவையும் அளித்திருக்கின்றது. உலகத்தில் எங்கும் நடக்காத அளவுக்கு செய்தியாளர்களை சிறிலங்கா அரசு கொலை செய்து வருகிறதே. ஊடகங்களையும் அவர்கள் முடக்கி போட்டிருக்கிறார்களே..? பேச்சு சுதந்திரத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் வலியுத்துகின்ற அதேவேளையில், சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்தும் நிற்கின்ற உலக நாடுகளிடம் கேட்க வேண்டிய கேள்வி இது. "நாட்டின் இறையாண்மை" என்ற போர்வையில் ஊடகவியலாளர்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் இந்த அநீதியான நடவடிக்கை, தமிழின அழிப்புப் போரின் இன்னுமொரு பரிமாணமே அல்லாமல் வேறொன்றும் அல்ல. வித்தியாதரனை சிறையில் அடைத்ததும், ஏனைய தமிழ் ஊடகத்துறையினரை நேரடியாகவே மிரட்டிப் பணிய வைத்ததும், ஈழத் தமிழர்கள் அவலங்களைச் சொல்லும் தமிழகச் சஞ்சிகைகளை விநியோகித்ததற்காக 'பூபாலசிங்கம் புத்தகசாலை' உரிமையாளரை சிறையில் அடைத்ததும் - எல்லாமே, தமிழர் படுகொலை பற்றிய உண்மைகள் வெளியே வராமல் தடுப்பதற்காகச் செய்யப்பட்ட ஏதேச்சதிகார நடவடிக்கைகளே ஆகும். "சகோதர யுத்தம்" என்று திரும்ப திரும்ப முதல்வர் கருணாநிதி சொல்லிக்கொண்டிருக்கிறாரே... சகோதர யுத்தம் நடத்தப்படாமல் இருந்தால் ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும் என்கிறாரே...?
80-களின் நடுப்பகுதியில் தமிழர் போராட்ட இயக்கங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் ஒரு தவறான கையாடலை இந்தியா மேற்கொண்டது என்பதும், அதன் விளைவாக - "விடுதலைக்காக போராடுகின்றோம்" என வந்தவர்கள் பலர் ஈழத்தையே கைவிட்டுத் துரோகிகளாக மாறிப் போனதும், அதன் பின்னர் - இந்தியப் படை தமிழீழத்தில் இருந்த காலத்தில் அந்த துரோகிகள், அதுவரை சிங்களப் படைகளே செய்திருக்காத அளவுக்குக் கொடூரமாகத் தமிழ் மக்களையே கொன்று குவித்த வரலாறும், கலைஞர் ஐயா அவர்கள் அறியாதது அல்ல. பிரபாகரன் அவர்கள் எப்போதோ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஈழத்தில் நான் சர்வாதிகாரியாக இருப்பேன் என்று சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டி, அப்போதிருந்தே புலிகள் மீதான எங்கள் நம்பிக்கை பொய்த்து விட்டது என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே...?
எங்கள் தலைவர் அப்படிச் சொன்னதான நினைவுகள் எதுவும் எனக்கு இல்லை. அப்படிச் சொல்லியிருந்தாலும் அவர் தவறான ஒரு நோக்கத்தோடு அப்படிக் குறிப்பிட்டிருப்பார் என நான் நம்பவில்லை. அப்படியான பத்திரிகைப் பேட்டி எதுவும் இருந்தால், அதை எனக்குக் காட்டுவீர்களானால் எப்படியான கேள்விக்கு, எவ்வாறான சூழலில், என்ன நோக்கத்தோடு அவர் அப்படி சொல்லியிருப்பார் என்பதை வைத்து உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்க முடியும். ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து முத்துக்குமார், ரவிச்சந்திரன், அமரேசன், ரவி, மலேசியா ரவி என வரிசையாக தீக்குளிப்புகள் நடக்கின்றன. உங்கள் கருத்து? முதற்கண் - தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த எல்லோருக்கும் தமிழீழ மக்களின் சார்பிலும், எமது இயக்கத்தின் சார்பிலும் நான் தலைசாய்ந்து வணக்கம் செலுத்துகின்றேன். தம்மையே வருத்தி அவர்கள் செய்த அந்தத் தியாகங்கள் மனித மொழிகளால் மதிப்பளிக்க முடியாத அளவுக்கு ஒப்பற்றவை.
ஆனால் - உயிர்கள் உன்னதமானவை. அவை மிகப் பெறுமதியானவை. உயிர்கள் விலையாகக் கொடுக்கப்படுகின்ற போது அவற்றுக்கு நிகரான விளைவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்தத் தியாகங்களுக்கு மதிப்பளித்தும், தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் - சரியான முடிவுகளை எடுப்பதற்கு இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தவறுகின்றனர் என்பது தான் எமக்கு வேதனையை அளிக்கின்றது.
"காலம் கடந்த நீதி, அநீதிக்கு சமமானது" என்று முத்துகுமார் தனது இறுதி சாசனத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்னும் காலத்தை தாழ்த்திகொண்டு தானே இருக்கிறது இந்திய அரசு? முத்துக்குமாரும் நீங்களும் இந்தியாவின் குடிமக்கள். இந்தியாவைப் பற்றி உங்களில் ஒருவர் கேட்ட கேள்விக்கு, இன்னொருவர் பதில் சொல்லிவிட்டீர்கள். இதில் இனி நான் சொல்லுவதற்கு எதுவுமே இல்லை. புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்று சொல்லப்படும் குற்றச்சாட்டு பற்றி? தமது சொந்த வாழ்விடங்களில் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அவர்களது நிலத்தின் மீது ஒரு படையெடுப்பை நடத்தி, அந்த மக்களை விரட்டியடித்துவிட்டு, வளமான அவர்களது நிலங்களை நிரந்தரமாக ஆக்கிரமித்து வைத்து, நாசமாக்கி, சிங்களவர்களைக் குடியேற்றி, சிங்கள மயமாக்கி, தமிழர்களின் தேசியத் தன்மையைச் சிதைக்கவே முனைகின்றது சிறிலங்கா அரசு.
அதற்காகவே மக்களை நாம் மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றோம் என்று அது கதைகளை உருவாக்கி, இந்த மண்ணிலிருந்து அனைத்துலக ஆதரவுடன் தமிழர்களை வெளியேற்றி நிரந்தர அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்க அது முனைகின்றது. "மனிதக் கேடயம்" என்ற இந்த வார்த்தைப் பிரயோகத்திற்குப் பின்னால் சிங்களப் பேரினவாதம் புதைத்து வைத்திருக்கும் ஆழமான அரசியல் சதியையும், இந்த சதி 61 ஆண்டு கால வரலாற்றில் பல பரிமாணங்களை எடுத்துள்ளது என்பதையும், அனைத்துலக சமூகம் மட்டுமன்றி தமிழினமும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்களை, அவர்களது போராளிகளான நாங்கள், எமது கேடயங்களாக வைத்திருக்க வேண்டிய தேவை தான் என்ன? இதுகாலம் வரையில் எதிர்நிலையில் இருந்த ஜெயலலிதா இப்போது மனம் மாறி உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஈழத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபா நிதியும் திரட்டப்பட்டிருக்கின்றது. இலங்கைக்குள்ளேயே தமிழர்களுக்கு தனி ஆட்சி வேண்டும் என்பதை வரவேற்கிறோம் என ஜெயலலிதா கூறுகின்றார். உங்கள் கருத்து?... தமிழீழ மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளையும், அவற்றை அடைவதற்கு உரிய தீர்வு என்ன என்பதையும் அவர் இப்போது புரிந்து வருகின்றார் என்பதையே இது காட்டுகின்றது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அவர் அளிக்கும் மதிப்பாகவும் இதனை நாம் கருத முடியும். எம்.ஜி.ஆர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எமது போராட்டத்தின் ஒரு நிபந்தனையற்ற காவலனாக விளங்கினார். அவர் உருவாக்கி வளர்த்த அந்த மரபு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்போது மீண்டும் உயிர்ப்புப் பெற்று தொடருகின்றது என்றே நாம் கருதுகின்றோம். தமிழீழ மக்களுக்கான அவர்களது இந்த ஆதரவு நிலை இனி எப்போதும் மங்காது நிலைத்து இருக்க வேண்டும் என்பதே தமிழீழ மக்களின் விருப்பம் ஆகும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாய் இருப்பது தொடர்பாக தான் பெருமைப்படுவதாக வைகோ அவர்கள் அண்மையில் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த ஆதரவாய் உள்ளார்கள். உங்கள் கருத்து? வைகோ அவர்கள் எமது போராட்டத்தின் சலசலப்பற்ற ஒரு துணைவனாக எப்போதுமே இருந்து வருகின்றார். தமிழீழ மக்களின் போராட்டம் தொடர்பான ஒரு தெளிவான, ஆழமான பரிந்துணர்வு அவருக்கு எப்போதும் இருக்கின்றது. அவரை எமது நண்பனாகப் பெற்றதற்காக நாங்களும் பெருமைப்படுகின்றோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்கள் எல்லோருமே தமிழீழ மக்களின் அவலங்கள் கண்டு நேர்மையாகவே துடிக்கின்றவர்கள். ஈழத் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெற்று, தம்மைத் தாமே ஆளும் சூழல் பிறக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியுடையவர்கள். இவ்வாறான அரசியல் தலைவர்களது ஆதரவு தான் தமிழீழ மக்களுக்கு நிம்மதியையும், எதிர்காலம் பற்றிய ஒரு நம்பிக்கையையம் தருகின்றது. சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளையும் தடவாளங்களையும் இந்திய அரசுதான் தந்து கொண்டிருக்கிறது என்று தொடந்து சொல்லப்பட்டு வந்த போது இந்திய அரசு அதை மறுத்து வருகிறதே? எமது போராட்டத்தை அழிப்பதற்காக இன்று நடந்து கொண்டிருக்கும் போரில் இந்தியா ஆற்றிய பங்கு மிகப் பெரியது என்று சிறிலங்கா அமைச்சர் ஒருவரே நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கின்றார். அதுவே உங்கள் கேள்விக்கான பதிலாக அமைகின்றது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்கிற பேச்சு இருக்கிறது. ஆயுத உதவிகளை வழங்கி வரும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்திருக்கிறது. ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் கருத்து என்ன? தமிழகத்தின் 7 கோடி தமிழர்கள் தான் தமிழீழ மக்களின் பலம்; அவர்களே எமது நம்பிக்கை. தமிழீழ மக்களின் சுதந்திர வாழ்வே தமிழக மக்களின் முதன்மைச் சிந்தனையாகவும் இப்போது உள்ளது. அதற்காக - எந்த நேரத்தில் எதனைச் செய்ய வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த தெளிவாகவே இருக்கின்றார்கள். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு எப்போதும் உண்டு. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு நீங்கள் வைத்திருக்கும் அரசியல் தீர்வு தான் என்ன? 1985 ஆம் ஆண்டில், பூட்டான் தலைநகர் திம்புவில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது சமரச முயற்சியின் போது ஒட்டுமொத்த தமிழீழ மக்களின் சார்பாக - தமிழர் பிரச்சினை தீர்வின் அடிப்படைகளாக "திம்பு கோட்பாடு" முன்வைக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் மத்தியத்துவத்தில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு - தமிழர்களின் தன்னாட்சி உரிமையையும், தமிழர் தாயகத்தையும் அங்கீகரிக்கின்ற ஒரு நியாயமான அரசியல் தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
[www.puthinam.com]
Sunday, April 5, 2009
[]மனித பேரழிவை நோக்கிய நிலையில் வன்னி: அவசர நடவடிக்கை தேவை
மனித பேரழிவை நோக்கிய நிலையில் வன்னி: அவசர நடவடிக்கை தேவை
திகதி: 06.04.2009 // தமிழீழம் // [(சங்கதிக்காக) அருஷ்]
சிறீலங்கா இராணுவம் புதுக்குடியிருப்பு பகுதியை முற்றாக கைப்பற்றியுள்ளதாக இன்று (5) அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஏறத்தாழ 300,000 மக்கள் தங்கியுள்ள 18-20 சதுரகி.மீ பரப்பளவுள்ள பகுதியை இராணுவத்தின் 53 ஆவது, 55 ஆவது, 58 ஆவது படையணிகளும், நடவடிக்கை படையணி 8 என்பனவும் சுற்றி வளைத்துள்ளதாக அனைத்துலக ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
விடுதலைப்புலிகளும் பாதுகாப்பான பிரதேசத்திற்குள் நிலையெடுத்துள்ளதாக படைத்தரப்பு போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டவாறு பாதுகாப்பான பிரதேசங்களின் மீது பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்துவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (4) இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேக்கா வன்னி படை கட்டளை தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள படையணிகளின் கட்டளை தளபதிகளுடன் ஒரு அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
சரத்பொன்சேக்காவின் இந்த விஜயத்தின் நோக்கம் புதுக்குடியிருப்பு நோக்கிய படையினரின் இறுதியான வலிந்த தாக்குதலை தீவிரப்படுத்துவதுடன், விரைவுபடுத்துவதுமே என வன்னி தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அங்கு கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மோதல்களில் இராணுவம் அதிகளவிலான இழப்புக்களை சந்தித்துள்ளது. ஆயிரக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், பல ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நான்கு நாட்களில் ஏறத்தாழ ஒரு டிவிசன் படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். எனினும் படையினர் தமது தரப்பு இழப்புக்களை மூடி மறைக்க முற்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் இழப்புக்கள் தொடர்பாக மிதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் பெருமளவான உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெரும் தொகையான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் அவை தொடர்பான ஆதாரங்களை படைத்தரப்பு வெளியிடவில்லை.
படைத்தரப்பை பொறுத்தவரையில் தற்போது மிகப்பெரிய உளவியல் போர் ஒன்றை நிகழத்தி வருகின்றது. அதாவது களமுனைகளில் படைத்தரப்பு அடையும் வெற்றிகளை விட இலத்திரனியல் ஊடகங்களில் அதிக வெற்றிகளை ஈட்டுவதற்கு முற்பட்டுவருகின்றது.
விடுதலைப்புலிகள் பெரும் அழிவு ஒன்றை எதிர்கொண்டு நிற்பதாக தெரிவிப்பதன் மூலம் உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் தமிழ் மக்களின் உளவுரன்களை முற்றாக முறியடிப்பதற்கு அரச தரப்பு முயன்று வருகின்றது. அது மட்டுமல்லாது, அனைத்துலக நாணய நிதியத்தின் கடனுதவிகளை பெற்று தற்போது சீரிழிந்து போயுள்ள பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கும் போரை விரைவாக முடிக்க வேண்டிய தேவை அரசுக்கு உண்டு.
போரை நிறைவு செய்துவிட்டதாக கூறி வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் அதிக நிதிகளை அனைத்துலக நாடுகளிடமும், அனைத்துலக அமைப்புக்களிடமும் இருந்து பெறுவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது. ஆனால் அரசின் இந்த நகர்வுகளுக்கு முன்னால் ஏறத்தாள 300,000 மக்களின் உயிர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளன.
இராணுவத்தின் ஐந்து முன்னனி டிவிசன்களை தற்போதைய பாதுகாப்பு பிரதேசமான 20 சதுர கி.மீ பரப்பளவுள்ள தென்னமரங்கள் நிறைந்த கடற்கரை பிரதேசத்தை சூழந்து நிற்கின்றன. இந்த பிரதேசம் பல ஆயிரம் மக்களின் குருதியினாலும், கண்ணீரினாலும் நனைந்த பிரதேசம்.
அங்கு உயிர் நீத்த எமது உறவுகள் ஏராளம். அதிக சுடுவலுவுடன், ஏறத்தாள 40,000 பேரை கொண்ட இராணுவம் அதன் சிறப்பு அணிகள் சகிதம் இந்த பிரதேசத்திற்குள் உட்பிரவேசிக்குமாக இருந்தால் அதனால் ஏற்படுடப்போகும் பேரனர்த்தம் தொடர்பாக அனைத்துலகம் தற்போதும் மௌனமாக இருப்பது வேதனையானது.
ஆனால் அதனை தடுக்க வேண்டிய கடமை அனைத்துலகத்திலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும், குறிப்பாக தமிழக மக்களுக்கும் உண்டு. அனைத்துலகத்தின் மெதுவான நகர்வுகளுக்கு முன்னர் விரைவான படைத்துறை வெற்றி ஒன்றை பெற்றுவிட அரசு முயன்று வருகின்றது. ஆனால் அதனை விட விரைவாக செயற்பட வேண்டிய கடமையும், தேவையும் உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு.
[www.sankathi.com]
திகதி: 06.04.2009 // தமிழீழம் // [(சங்கதிக்காக) அருஷ்]
சிறீலங்கா இராணுவம் புதுக்குடியிருப்பு பகுதியை முற்றாக கைப்பற்றியுள்ளதாக இன்று (5) அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஏறத்தாழ 300,000 மக்கள் தங்கியுள்ள 18-20 சதுரகி.மீ பரப்பளவுள்ள பகுதியை இராணுவத்தின் 53 ஆவது, 55 ஆவது, 58 ஆவது படையணிகளும், நடவடிக்கை படையணி 8 என்பனவும் சுற்றி வளைத்துள்ளதாக அனைத்துலக ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
விடுதலைப்புலிகளும் பாதுகாப்பான பிரதேசத்திற்குள் நிலையெடுத்துள்ளதாக படைத்தரப்பு போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டவாறு பாதுகாப்பான பிரதேசங்களின் மீது பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்துவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (4) இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேக்கா வன்னி படை கட்டளை தளத்திற்கு விஜயம் மேற்கொண்டு புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள படையணிகளின் கட்டளை தளபதிகளுடன் ஒரு அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
சரத்பொன்சேக்காவின் இந்த விஜயத்தின் நோக்கம் புதுக்குடியிருப்பு நோக்கிய படையினரின் இறுதியான வலிந்த தாக்குதலை தீவிரப்படுத்துவதுடன், விரைவுபடுத்துவதுமே என வன்னி தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அங்கு கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மோதல்களில் இராணுவம் அதிகளவிலான இழப்புக்களை சந்தித்துள்ளது. ஆயிரக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், பல ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் படைத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நான்கு நாட்களில் ஏறத்தாழ ஒரு டிவிசன் படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர். எனினும் படையினர் தமது தரப்பு இழப்புக்களை மூடி மறைக்க முற்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகளின் இழப்புக்கள் தொடர்பாக மிதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் பெருமளவான உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெரும் தொகையான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ள போதும் அவை தொடர்பான ஆதாரங்களை படைத்தரப்பு வெளியிடவில்லை.
படைத்தரப்பை பொறுத்தவரையில் தற்போது மிகப்பெரிய உளவியல் போர் ஒன்றை நிகழத்தி வருகின்றது. அதாவது களமுனைகளில் படைத்தரப்பு அடையும் வெற்றிகளை விட இலத்திரனியல் ஊடகங்களில் அதிக வெற்றிகளை ஈட்டுவதற்கு முற்பட்டுவருகின்றது.
விடுதலைப்புலிகள் பெரும் அழிவு ஒன்றை எதிர்கொண்டு நிற்பதாக தெரிவிப்பதன் மூலம் உள்நாட்டிலும், அனைத்துலகத்திலும் தமிழ் மக்களின் உளவுரன்களை முற்றாக முறியடிப்பதற்கு அரச தரப்பு முயன்று வருகின்றது. அது மட்டுமல்லாது, அனைத்துலக நாணய நிதியத்தின் கடனுதவிகளை பெற்று தற்போது சீரிழிந்து போயுள்ள பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கும் போரை விரைவாக முடிக்க வேண்டிய தேவை அரசுக்கு உண்டு.
போரை நிறைவு செய்துவிட்டதாக கூறி வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் அதிக நிதிகளை அனைத்துலக நாடுகளிடமும், அனைத்துலக அமைப்புக்களிடமும் இருந்து பெறுவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது. ஆனால் அரசின் இந்த நகர்வுகளுக்கு முன்னால் ஏறத்தாள 300,000 மக்களின் உயிர்கள் ஆபத்தில் சிக்கியுள்ளன.
இராணுவத்தின் ஐந்து முன்னனி டிவிசன்களை தற்போதைய பாதுகாப்பு பிரதேசமான 20 சதுர கி.மீ பரப்பளவுள்ள தென்னமரங்கள் நிறைந்த கடற்கரை பிரதேசத்தை சூழந்து நிற்கின்றன. இந்த பிரதேசம் பல ஆயிரம் மக்களின் குருதியினாலும், கண்ணீரினாலும் நனைந்த பிரதேசம்.
அங்கு உயிர் நீத்த எமது உறவுகள் ஏராளம். அதிக சுடுவலுவுடன், ஏறத்தாள 40,000 பேரை கொண்ட இராணுவம் அதன் சிறப்பு அணிகள் சகிதம் இந்த பிரதேசத்திற்குள் உட்பிரவேசிக்குமாக இருந்தால் அதனால் ஏற்படுடப்போகும் பேரனர்த்தம் தொடர்பாக அனைத்துலகம் தற்போதும் மௌனமாக இருப்பது வேதனையானது.
ஆனால் அதனை தடுக்க வேண்டிய கடமை அனைத்துலகத்திலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும், குறிப்பாக தமிழக மக்களுக்கும் உண்டு. அனைத்துலகத்தின் மெதுவான நகர்வுகளுக்கு முன்னர் விரைவான படைத்துறை வெற்றி ஒன்றை பெற்றுவிட அரசு முயன்று வருகின்றது. ஆனால் அதனை விட விரைவாக செயற்பட வேண்டிய கடமையும், தேவையும் உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு.
[www.sankathi.com]
[]இலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்: இந்திய எழுத்தாளர் அருந்ததி ரோய்
இலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்: இந்திய எழுத்தாளர் அருந்ததி ரோய்
[புதன்கிழமை, 01 ஏப்ரல் 2009, 04:18 பி.ப ஈழம்] [க.நித்தியா]
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழான 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' வுக்கு எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான 'புக்கர் பரிசு' பெற்ற 'த கொட் ஓஃப் ஸ்மோல் திங்ஸ்' எனும் புதினத்தை எழுதியவர் அருந்ததி ரோய்.
இலக்கியப் பணிகளுக்கு இடையே சமூகத்தின் தீவிரப் பிரச்சினைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கு எதிராக களமிறங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவரின் கட்டுரையை இங்கு தமிழில் தருகிறோம்:
இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மௌனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, அனைத்துலக செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விடயமாகும்.
இலங்கையில் இருந்து கசிந்து வரும் சிறிதளவு தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளம் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தகர்ப்பதற்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்களை இழைப்பதற்குமே 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பரப்புரையை சிறிலங்கா அரசு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகிறது என்றே தோன்றுகிறது.
தங்களை அப்பாவிகள் என்று மெய்ப்பிக்காத வரையில், ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் சிறிலங்கா அரசு, அப்பாவி மக்கள் உள்ள பகுதிகள், மருத்துவமனைகள், தங்கும் இடங்கள் மீது குண்டு வீசி அவற்றைப் போர்ப் பகுதியாக மாற்றி வருகிறது.
சண்டை நடைபெறும் பகுதியில் 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.
இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறுகூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.
ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகளைத் 'துடைத்து எறிய வேண்டும்' என்பதை சிறிலங்கா அரசு அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அப்பாவி மக்களும், 'பயங்கரவாதிகளும்' வீழ்ந்து கொண்டிருப்பது, சிறிலங்கா அரசு இனப் படுகொலையை நடத்தும் விளிம்பில் இருப்பதன் அறிகுறியாகத் தோன்றுகிறது.
ஏற்கெனவே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்கள் நரகத்துக் கொடுமைகளின் அனுபவச் சித்திரிப்புகளாக உள்ளன.
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்குப் படாமல் திறமையாக மறைக்கப்படுகிற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகிற இனவெறிப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.
தண்டனைக் உட்படாமல் சிறிலங்கா அரசு இந்தக் குற்றங்களை இழைத்து வருகிறது. ஆழமாக வேரோடியுள்ள இனவெறித் தப்பெண்ணங்கள்தான் இலங்கையில் தமிழர்கள்ஒதுக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன என்பதையே இது உண்மையில் வெளிப்படுத்துகிறது. அந்த இனவெறிக்கு சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, கலவரம், சித்திரவதை என நீண்ட வரலாறு உண்டு.
வன்முறையற்ற அமைதி வழியிலான எதிர்ப்பாகத் தொடங்கி, பல பத்தாண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் கொடிய தன்மைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.
ஏன் இந்த மௌனம் இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயற்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை என்று இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.
சமுதாயத்தை 'அச்சத்தில் உறைய வைக்கிற' கொலைக் கும்பல்கள், 'வெள்ளை வேன் கடத்தல்கள்' தொடர்பாக எல்லாம் சமரவீர தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உட்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.
பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் சிறிலங்கா அரசு பயன்படுத்துவதாக அனைத்துலக பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு பொருள் உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? சிறிலங்கா நிலைமைக்கு உதவி செய்ய அல்லது தீங்கு விளைவிக்க என்ன செய்கின்றன?
இலங்கையில் நடைபெறும் போர் தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. 10-க்கும் அதிகமானோர் தீக்குளித்து இறந்துள்ளனர். அரசியல் தந்திர வெளிப்பாடுகள் சில இருந்தாலும், பெரும்பாலும் மக்களின் சீற்றமும், வேதனையும் மெய்யானவை. இது தேர்தல் சிக்கலாக மாறியிருக்கிறது.
இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் அசாதாரணமானது. இங்கே ஏன் இந்த மௌனம்? இந்தச் சிக்கலில் இங்கே 'வெள்ளை வான் கடத்தல்கள்' எதுவும் இல்லையே. இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பாதிப்பின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த மௌனம் மன்னிக்க முடியாதது.
முதலில் ஒரு பக்கத்துக்கு ஆதரவாகவும் பிறகு இன்னொரு பக்கத்துக்கு ஆதரவாகவும் நிலை எடுத்து பொறுப்பற்ற முறையில் பட்டும் படாமல் மேலோட்டமாகச் செயற்படும் இந்திய அரசின் நீண்ட கால வரலாற்றைப் பார்க்கும்போது இந்த மௌனம் மிகவும் மன்னிக்க முடியாதது. நான் உட்பட, நம்மில் பலரும், இது தொடர்பாக முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போர் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காததே அதற்குக் காரணம்.
படுகொலைகள் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையை எதிர்நோக்கி உள்ளனர். ஓர் இனப் படுகொலை நிகழ்வதற்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் நாட்டில் ஏன் இந்த சாவு அமைதி? இது மாபெரும் மனிதப்பேரழிவுத் துன்பம். காலம் கடப்பதற்கு முன் உலகம் இப்போதே தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[www.puthinam.com]
[புதன்கிழமை, 01 ஏப்ரல் 2009, 04:18 பி.ப ஈழம்] [க.நித்தியா]
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழான 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' வுக்கு எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான 'புக்கர் பரிசு' பெற்ற 'த கொட் ஓஃப் ஸ்மோல் திங்ஸ்' எனும் புதினத்தை எழுதியவர் அருந்ததி ரோய்.
இலக்கியப் பணிகளுக்கு இடையே சமூகத்தின் தீவிரப் பிரச்சினைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கு எதிராக களமிறங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவரின் கட்டுரையை இங்கு தமிழில் தருகிறோம்:
இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மௌனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, அனைத்துலக செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விடயமாகும்.
இலங்கையில் இருந்து கசிந்து வரும் சிறிதளவு தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளம் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தகர்ப்பதற்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்களை இழைப்பதற்குமே 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பரப்புரையை சிறிலங்கா அரசு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகிறது என்றே தோன்றுகிறது.
தங்களை அப்பாவிகள் என்று மெய்ப்பிக்காத வரையில், ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் சிறிலங்கா அரசு, அப்பாவி மக்கள் உள்ள பகுதிகள், மருத்துவமனைகள், தங்கும் இடங்கள் மீது குண்டு வீசி அவற்றைப் போர்ப் பகுதியாக மாற்றி வருகிறது.
சண்டை நடைபெறும் பகுதியில் 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.
இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறுகூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.
ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகளைத் 'துடைத்து எறிய வேண்டும்' என்பதை சிறிலங்கா அரசு அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அப்பாவி மக்களும், 'பயங்கரவாதிகளும்' வீழ்ந்து கொண்டிருப்பது, சிறிலங்கா அரசு இனப் படுகொலையை நடத்தும் விளிம்பில் இருப்பதன் அறிகுறியாகத் தோன்றுகிறது.
ஏற்கெனவே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்கள் நரகத்துக் கொடுமைகளின் அனுபவச் சித்திரிப்புகளாக உள்ளன.
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்குப் படாமல் திறமையாக மறைக்கப்படுகிற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகிற இனவெறிப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.
தண்டனைக் உட்படாமல் சிறிலங்கா அரசு இந்தக் குற்றங்களை இழைத்து வருகிறது. ஆழமாக வேரோடியுள்ள இனவெறித் தப்பெண்ணங்கள்தான் இலங்கையில் தமிழர்கள்ஒதுக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன என்பதையே இது உண்மையில் வெளிப்படுத்துகிறது. அந்த இனவெறிக்கு சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, கலவரம், சித்திரவதை என நீண்ட வரலாறு உண்டு.
வன்முறையற்ற அமைதி வழியிலான எதிர்ப்பாகத் தொடங்கி, பல பத்தாண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் கொடிய தன்மைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.
ஏன் இந்த மௌனம் இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயற்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை என்று இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.
சமுதாயத்தை 'அச்சத்தில் உறைய வைக்கிற' கொலைக் கும்பல்கள், 'வெள்ளை வேன் கடத்தல்கள்' தொடர்பாக எல்லாம் சமரவீர தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உட்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.
பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் சிறிலங்கா அரசு பயன்படுத்துவதாக அனைத்துலக பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு பொருள் உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? சிறிலங்கா நிலைமைக்கு உதவி செய்ய அல்லது தீங்கு விளைவிக்க என்ன செய்கின்றன?
இலங்கையில் நடைபெறும் போர் தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. 10-க்கும் அதிகமானோர் தீக்குளித்து இறந்துள்ளனர். அரசியல் தந்திர வெளிப்பாடுகள் சில இருந்தாலும், பெரும்பாலும் மக்களின் சீற்றமும், வேதனையும் மெய்யானவை. இது தேர்தல் சிக்கலாக மாறியிருக்கிறது.
இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் அசாதாரணமானது. இங்கே ஏன் இந்த மௌனம்? இந்தச் சிக்கலில் இங்கே 'வெள்ளை வான் கடத்தல்கள்' எதுவும் இல்லையே. இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பாதிப்பின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த மௌனம் மன்னிக்க முடியாதது.
முதலில் ஒரு பக்கத்துக்கு ஆதரவாகவும் பிறகு இன்னொரு பக்கத்துக்கு ஆதரவாகவும் நிலை எடுத்து பொறுப்பற்ற முறையில் பட்டும் படாமல் மேலோட்டமாகச் செயற்படும் இந்திய அரசின் நீண்ட கால வரலாற்றைப் பார்க்கும்போது இந்த மௌனம் மிகவும் மன்னிக்க முடியாதது. நான் உட்பட, நம்மில் பலரும், இது தொடர்பாக முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போர் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காததே அதற்குக் காரணம்.
படுகொலைகள் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையை எதிர்நோக்கி உள்ளனர். ஓர் இனப் படுகொலை நிகழ்வதற்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் நாட்டில் ஏன் இந்த சாவு அமைதி? இது மாபெரும் மனிதப்பேரழிவுத் துன்பம். காலம் கடப்பதற்கு முன் உலகம் இப்போதே தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[www.puthinam.com]
Saturday, April 4, 2009
[]தற்போதைய நிலமை குறித்து வன்னித் தமிழர் பேரவை ஐ.நா.விற்கு அனுப்பியுள்ள திறந்த மடல்
தற்போதைய நிலமை குறித்து வன்னித் தமிழர் பேரவை ஐ.நா.விற்கு அனுப்பியுள்ள திறந்த மடல்
திகதி: 05.04.2009 // தமிழீழம் // [வன்னியன் ]
வன்னியின் தற்போதைய அவல நிலை குறித்து வன்னித் தமிழர் பேரவை திறந்த மடல் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான செயலர் ஜோன் கொல்ம்சிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வன்னித் தமிழர் பேரவையின் தலைவரும் செயலாளரும் கையொப்பமிட்டு, சிறிலங்காவின் பொய் பரப்புரைகளுக்கும், சர்வதேசத்தின் தவறான புரிந்துணர்வுகளுக்கும் விளக்கமளிக்கும் வகையில் வன்னி நிமைகளை, மக்களின் அவலங்களை விளக்கி நீண்ட அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் தமிழ் மொழியாக்கத்தைத் தருகின்றோம்.
பெறுநர்:-
கலாநிதி ஜோன் ஹோல்ம்ஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலர்
ஒச்சாயு.
என்ஜேனீவா
சுவிற்சர்லாந்து
பெருமதிப்பிற்குரிய ஐயா,
"திறந்த மடல்"
ஜோன் ஹோம்ஸ் தன்னைத் தப்பிப்பிழைக்கும் தந்திரக்கலையில் வல்லோன் எனத் தானே நிரூபித்து நிற்கின்றார். முன்னர் ஒருதடவை ராஜபக்ச அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சரே அவரைத் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் பணம் பெறும் அவர்களின் முகவர் எனக் குற்றம் சாட்டியிருந்தார். இன்று அவரோ ராஜபக்சவின் முகவராகத் தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமளவுக்கு அந்த வகையில் தன்னுடைய அறிக்கைகளை வெளியிடுவதையே தன்னுடைய இலக்காகவும் நோக்காகவும் கொண்டு அண்மைக்காலங்களில் செயற்பட்டு வருகின்றார்.
வெறுமனே சிறிலங்காவின் பரப்புரை யந்திரத்திலிருந்து கிடைக்கும் ஆதார சான்றுகளற்ற அறிக்கைகளைக் கொண்டே தனது அறிக்கைகளை அளிக்கின்றார். வன்னி மக்கள் முகங்கொடுத்து நிற்கும் அவர்களது உடனடிப்பிரச்சினைகனைச் சந்திப்பதற்குப் பதிலாக களநிலை உண்மைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலைப்பாடுகளை அவர் எடுக்கின்றார் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
வன்னி மக்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் பாதுகாப்பைப் பேணல், உணவு மருந்து தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பனவற்றுக்கு உத்தரவாதம் அளிக்காது அதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கத்திலிருந்து வேறுபாடில்லாத நிலைகளையே அவர் எடுத்து வருகின்றார். அவரது அறிக்கையில் வன்னி மக்களின் விருப்பத்திற்கு மாறாக வன்னி மக்களைத் தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வைத்துள்ளனர் எனச் சலஞ்சாதிக்க முயல்கிறார். அதேவேளை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்னி மக்களுக்கு சிறப்பான வாழ்வு உள்ளதென்பது போலவும் காட்டப்பார்க்கின்றார்.
அதே அறிக்கையில் வன்னி மக்களைப் போக விடுமாறு தமிழீழ விடுதலைப்புலிகளைக் கோருவதையும் பலவந்தமாகப் படையில் சேர்ப்பதை நிறுத்தும்படியும் மனித கேடயமாக மக்களைப் பயன்படுத்த வேண்டாமெனவும் அவர் கேட்டுள்ளார். வன்னிக்கு வருகை தராமலும் வன்னி மக்களைச் சந்திக்காமலும் அவர்களுடைய விருப்புக்களையும் தேவைகளையும் கண்டறியாமலும் இந்தத் தவறான தகவல்களை அவர் எங்கிருந்து பெற்றார் என நாம் கேட்க விரும்புகின்றோம். திரு ஹோம்ஸ் புனை கதைகளை உரைக்கின்றார் அல்லது அரசாங்கத்தின் வழமையான பரப்புரைகளையே அவரும் கூறுகின்றார் என நாம் துணிந்து கூறுகின்றோம்.
வன்னிப் பிரச்சினை போன்ற வேறு எந்தச் சர்வதேசப் பிரச்சினைக்காவது பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது பாரம்பரிய தாயகத்திலிருந்து வெளியேறி வேறு பகுதிகளுக்குச் சென்று திருப்பதிகரமான தீர்வைக் பெறும்படி கேட்கப்பட்டுள்ளதா என நாம் ஹோம்ஸைக் கேட்க விரும்புகின்றோம். பலஸ்தீன மக்களின் பிரச்சினையில் அவர்களை உலகின் வேறு எந்தப் பகுதிக்காவது சென்று அவர்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டதா? வரலாற்றை ஆழமாகப் பார்ப்பின் யூதர்களுக்கு மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலுக்கு மாற்றாக கலிபோர்னியாவில் வாழுமாறும் உகண்டாவில் வாழுமாறும் கேட்கப்பட்டபோது அவர்கள் எதற்காக அதனை மறுத்தார்கள்? காரணம் இஸ்ரேல் அவர்களின் ஆன்மீகப் பூமி. அதே மான நரம்பு வன்னி மக்களுக்கும் இருக்கையில் திரு ஜோன் ஹோம்ஸ் போன்ற சிந்தனையாழமற்றவர்கள் வன்னி மக்களை அவர்களுடன் பின்னிப்பிணைந்த வீடுகளையும் அவர்கள் தாயகத்தையும் விட்டு வெளியேறும்படி கேட்கையில் மறுப்பார்கள் தானே.
எங்கள் எண்ணப்படி ஐ.நா வுக்கு அண்மைக்காலங்களில் அதன் பிடி தளர்ந்து விட்டது. தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்காக உலகின் சிறுபான்மையினப் பிரச்சினைகளைச் சந்திக்க மறுக்கிறது. சிறுபான்மையினங்கள் தங்கள் முன்னோர்களின் தாயகத்தில் வாழும் உரிமை உண்டு ஜோன் ஹோம்ஸ்ம் அவரது மேலதிகாரிகளதும்; விருப்புகளுக்கு ஏற்ற கூத்துக்களிலும் கவர்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை ஐ நாவின் உயர்மட்டங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபை இன்று கையாலாகாத அமைப்பாகியுள்ளது. அதன் அதிகாரிகள் தாங்கள் தங்கள் பதவிக்குப் பெறும் பணத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக மட்டுமே உள்ளனர். இந்த இடத்தில் ஜோன் ஹோம்ஸ்க்கு ஒன்றை நினைவுறுத்த விரும்புகின்றோம். வன்னி நிலம் உலகின் மிக மோசமான கொலைக்களமாகக் காட்சியளிக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் எவ்வித அக்கறையுமின்றி தினம் தினம் 50 முதல் 60 க்கு மேற்பட்ட தமிழரைக் கொன்றும் 100 முதல் 150 க்கு மேற்பட்ட தமிழரின் உடலுக்குச் சேதம் இழைத்தும் வருகின்றது. திரு ஜோன் ஹோம்ஸ் நன்கு படித்தவர் நிறைந்த நிர்வாக அனுபவம் உள்ளவர் பரப்புரைகளுக்கு ஊடாக உண்மைகளைக் கண்டறியும் மதிநுட்பம் உள்ளவர் என்பதை நாங்கள் ஏற்கின்றோம். இவ்வளவு உயர்ந்த திறமைகளை எல்லாம் கொண்ட ஜோன் ஹோம்ஸால் வன்னியில் மக்கள் கொன்று குவிக்கப்படுவதை மட்டும் கண்டுக்கொள்ள இயலவில்லையே என்பது பலத்த ஏமாற்றத்தை எங்களுக்குத் தருகிறது.
இந்தக் கொலைக்களம் சர்வதேச குரல்கள் எழாதவாறு செய்து கொண்டு வன்னியின் சனத்தொகையை குறைத்து மெதுவான முறையில் இனஅழிப்பைச் செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகமான இனஅழிப்பா மெதுவான இனஅழிப்பா என்பதல்ல எந்த வகையான இனஅழிப்பும் நவீன உலகால் முழுஅளவில் கண்டிக்கப்பட வேண்டியதாக உள்ளது. இதனை ஜோன் ஹோம்ஸ் செய்யவில்லை என்றால் அது அவரின் சிந்தனை வெறுமையையே வெளிப்படுத்துகின்றது. ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் எதற்காக இந்த நாட்டின் இனஅழிப்பைக் கண்டிக்க மறுக்கிறார்கள்?
வன்னி மக்களில் பெரும்பாலனாவர்கள் மாதக்கணக்கில் மெதுவான இனஅழிப்புச் செய்யப்பட்டதன் பின் கூட்டு மொத்தமாகக் குரல் எழுப்பலாமெனச் சர்வதேச சமுகம் நம்புகின்றதா?சத்தற்ற உணவென்பது மெல்லச் சாகடிப்பதற்கு மறுபெயர். வன்னி மக்கள் சத்தற்ற உணவின் பிடியில் சிக்கியுள்ளனர். தோலுரிக்கப்படாத சோயாவும் உமியகற்றப்படாத அரிசியும் பருப்பும் தினம் உண்டு அவர்கள் உயிர்பிழைக்கின்றனர். உணவின் கலோரி பெறுமதிகள் பற்றிப் பேசும் மேற்குக்கு வன்னியில் மக்கள் சத்தின்றி சாவதைக் காண முடியாது இருக்கும் ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் அவர்கள் வகிக்கும் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு எந்த அளவுக்கு இந்நேரத்தில் தகுதியுடையவர்கள் என்று எண்ணத் தோன்றவில்லையா?
வன்னி மக்கள் மேல் வீசப்படக் கூடாதெனத் தடுக்கப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகள் வெள்ளைப் பொசுப்பரஸ் குண்டுகள் நச்சு வாயு உருளைகள் தரையாலும் கடலாலும் வானாலும் கொட்டப்படுதைக் ஹோம்ஸ் தன்வசதிக்கேற்றவாறு கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்.
சிறிலங்கா அரசாங்கம் வைத்தியசாலைகள் மேல் குண்டுகளை வீசுவதையும் திரள்நிலை அளவில் அங்குள்ள நோயாளிகளைக் கொல்வதையும் நியாயப்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் நியாயப்படுத்தலைக் கண்டிக்கவோ அல்லது இத்தகைய குண்டு வீச்சுக்கள் இடம்பெறாதவாறு தடுக்கவோ அதுவரை ஐ நா உட்பட எந்தச் சர்வதேச அமைப்பும் முயற்சிக்கவில்லை. இரண்டாவது உலக மகாயுத்தத்தில் எதிரிகளின் படைகள் வைத்தியசாலைகளைத் தாககுவதைத் தவிர்த்தன. சிறிலங்காவுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்களிக்கபட்டுள்ளதா? அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வைத்தியசாலைகளைத் தாககுவதைக் கூட தவிர்க்க ஐ நா வால் ஏன் முடியவில்லை? வேறு மொழியில் கூறுவதானால் வன்னி மெதுவாக வைத்தியசாலைகள் அற்ற பிரதேசமாக மாற்றப்பட்டு வருகிறது.
உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலாவது இதற்குச் சமானமானதாக உள்ளதா? ஹோம்ஸையே இதற்குப் பதிலளிக்க விட்டுவிடுவோம். வன்னியில் இன்று வைத்தியசாலைகள் மரங்களின் கீழும் இடம்மாற்றக் கூடிய கூடாரங்களிலும் ஒளிவிடங்களிலும் நடைபெறுகின்றது. குறைந்த உபகரணங்களுடனும் பொருத்தமற்ற மருந்துகளுடனும் மருத்துவர்கள் மிக அதிக அளவான நோயாளிகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினதும் அதன் சுகாதர அமைச்சினதும் மருந்துகளுக்கான தடைகளினாலேயே பொருத்தமான மருந்துகளுக்கு வன்னியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தை இறப்பு வீதம் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்க்குச் சத்தின்மையினால் குறைப்பிரசவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில வாரங்களில் 12 பேர் பட்டினியால் இறந்துள்ளனர் என உள்ளுர் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 21ம் நூற்றாண்டு இவை முழு மனித குலத்துக்குமே அவமானமாகிறது.
மருந்துகள் சுகப்படுத்தலுக்கான கருவிகள். ஆனால் சிறிலங்காவில் மருந்துகள் உயிர் ஆபத்தை விளைப்பதற்கான கருவிகள். சிறிலங்கா அரசாங்கம் வன்னிக்கு எல்லாவிதங்களிலும் சகல முயற்சிகளையும் எடுத்து வன்னிக்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்கள் செல்லாதவாறு தடுத்து வருகின்றது. சிறிலங்கா தன்னுடைய மருத்துவ நிலையங்களை கடலுக்கு அப்பால் திருகோணமலையில் ஏற்படுத்தி அங்கு தன்னால் குண்டுவீசப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கிறது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது நிறுவனரின் பார்வையில் இருந்து விலகி வன்னியிலிருந்து திருகோணமலைக்கு காயப்பட்டவர்களுக்கு கடற்பயணத்துக்கு உதவி வருகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வேறு மொழியில் கூறுவதானால் அரசாங்கத்தின் காயப்படுத்தி விட்டு அவர்களை காயமுற்ற பகுதிகளுக்கு வெகுதூரத்தில் கடலுக்கு அப்பால் உள்ள வைத்தியாலைகளுக்குக் காவிச் செல்லும் முயற்சியில் தன்னையறியாமலே ஒரு அங்கமாகி நிற்கிறது.
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட கப்பலில் கடலால் திருகோணமலைக்கும் அதற்கு அப்பாலும் எடுத்துச் செல்லப்பட்ட பொழுது கப்பலில் இறந்தவர்கள் பலர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்திய அரசாங்கம் புல்மோட்டையில் அண்மையில் ஒரு வைத்தியசாலையைத் திறந்து வன்னியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் எடுத்து வரப்படும் காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. எமக்கு கிடைக்கப் பெற்ற நம்பகமான தகவல்களின் படி அங்கு கூறப்பட்டவாறு வைத்தியசாலை திறக்கப்படவில்லை எனவும் அங்கு தகவல் திரட்டும் புலனாய்வு நிலையமே திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.இந்த விபரிப்பில் நாம் ஏற்கனவே கூறியவாறு வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுகள் அங்குள்ள மக்களின் தேவைகளுக்குப் போதாதுள்ளது. நாம் ஏற்கனவே கூறியவாறு மக்கள் சத்துணவு இன்மையால் பாதிப்புற்றுள்ளனர். பச்சை இலைகளோ அல்லது மரக்கறிகளோ சமைப்பதற்கோ உண்பதற்கோ அங்கு இல்லை. இந்த உதவிகள் ஏதுமற்ற மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் உடல்நலம் பெற நீண்டகாலம் எடுக்கும். சத்துணவின்மையாலும் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதாலும் அடிக்கடி நடைபெறும் இடப்பெயர்வுகளாலும் வன்னியில் கல்வி நிலை தேக்கமடைந்துள்ளது. இது ஜோன் ஹோம்ஸ் கருத்தில் எடுக்காத மற்றொரு மனித அவலமாக உள்ளது.
அரசாங்கம் மத்தாளன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய மெல்லிய கரையோரக் கிராமங்களை சுடுதிறன் பாவியாத கிராமங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆயினும் மீனவர்கள் எவருக்கும் கடலில் இறங்குவதற்குத் துணிவு இல்லை. ஏற்கனவே கடலில் இறங்கிய மீளவர்களைச் சிறிலங்காக் கடற்படையினர் சுட்டழித்ததன் வழி வந்த மன அச்சம். நாளாந்தம் பிடிபடும் மீனின் அளவு மிகக் குறைவாக இருப்பதுடன் மத்தியதர வர்க்கத்தினரால் நுகரப்பட இயலாத அளவுக்கு விலை உயர்வாக உள்ளது. இந்தப் பகுதிகள் 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதால் அதிக நெருக்கமானதாக உள்ளது.
நிலம் வெறுமையானதாகவும், வசதிகள் ஏதுமற்றதாகவும், பெரும் பகுதி மனித வசிப்பிடத்திற்கு ஏற்றதல்லதாகவும் இருக்கின்றது. ஆயினும் மக்கள் அதில் ஒட்டிக்கொண்டிருப்பது, இது அவர்களுடைய தாயகம் என்பதனால், ஹோல்ம்ஸ் கூறுவது உண்மையாக இருப்பின் தமிழர்கள் எப்பொழுது இந்த மண் கழிவுகள் நிறைந்த பகுதியைக் கைவிட்டு வாக்களிக்கப்பட்ட அரச பகுதிக்கு சென்றிருப்பார்கள். விடுதலைப் புலிகள் அவாக்ளைத் தடுத்து வைத்திருக்கவில்லை. மக்கள் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிக்க முடியாத தன்மையுடையவர்களாக இருக்கின்றார்கள். மக்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பான வாழ்வு விடுதலைப் புலிகளுடன் தங்கியிருப்பதில்தான் உள்ளது என்பதுடன், நம்ப முடியாத அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளைப் பின்பற்றுவதில்லை என்பதில் தெளிவான இருக்கின்றார்கள்.
நாங்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். அங்கு 2 முதல் 2.5 அங்குலம் நீளமான மெல்லிய மீன்கள்தான் உண்டு. இதனுடைய சுவை விளங்கிக்கொள்ள முடியாததாக இருக்கும். இந்த மீன்கூட ஒரு கிலோ 2,000 ரூபாவிற்கே கிடைக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய மீன்கள் மிருக தீனியாகவோ அல்லது உரமாகவோகூட பயன்படுத்தப்படுவதில்லை. இந்த விபரங்களை எல்லாம் எதற்காக இங்கு சமர்ப்பிக்கின்றோம் என்றால் இந்த மக்களின் வாழ்க்கை முறையை ஜோன் ஹோல்ம்ஸ் விளங்கிக்கொள்ள முடியாது இருக்கின்றார் என்தற்காகவே.
திரு.ஹோல்ம்ஸ் வன்னி மக்களை முற்றாக திரள் நிலையில் கிளப்பியெடுத்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வவுனியா, மன்னாருக்கு செல்ல வைப்பதால் பிரச்சினையைத் தீர்க்கலாம் என கருதுகின்றார். இது ஒருபோதும் ஏற்புடைய தீர்வாகமாட்டாது. ஏங்களுடைய மக்களை கிளப்பியெடுத்து தூர தேசங்களில் குடியமர்த்துவது தேசியத் தீர்வாகக் காட்டப்படுமானால், இதுவொரு தொடர்ச்சியான தொடர்முறை நிகழ்ச்சியாகவே மாற்றப்பட்டுவிடும். நாங்கள் திரு.ஹோல்ம்ஸிற்கு எவ்வாறு யு.என்.எச்.சி.ஆர் மக்களை அவர்களது சொந்த வீடுகளில் குடியமர்த்துவதற்கு முயற்சித்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அதுவே சரியான முறையில் செயற்படுவதற்கான வழியாகும். வன்னியிலுள்ள மக்களுக்கு சுகாதாரமான சுற்றாடல், உணவு, மருந்து, பாதுகாப்பான வாழ்வு ஆகியவையே தேவையாக இருக்கின்றது. அரசாங்கம் தன்னுடைய சொந்தப் படைகளைக் கொண்டு மக்களுக்கு கைநீட்டி ஆணையிடுவது போல் ஆயுதப் படைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் கொண்டு சென்று அந்த முகவர்கள் ஊடாக குடியமர்த்தப்பார்க்கின்றது. திரு.ஹோல்ம்ஸ் அவருடைய புத்தி நுணுக்கத்தன்மையினால் இந்த திட்டமிட்ட முறைமையை இனம் கண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
திரு.ஹோல்ம்ஸிற்கு வன்னி மக்களது நலனில் ஏதாவது அக்கறை இருக்குமாக இருந்தால் அவர் செய்ய வேண்டியது எல்லாம், அவர்களுக்கு போதிய சத்துணவும், பாதுகாப்பான வாழ்வும், நிரந்தரமான அமைதியும் வழங்குவதாகவும். நாங்கள் திரும்பவும் திரும்பவும் வலியுறுத்துவது என்னவென்றால் மக்களை அவர்களுடைய இடங்களில் இருந்து கிளப்புவதோ அல்லது பயணப்பட வைப்பதோ தீர்வாக அமையாது, மாறாக தண்டனையாகவே மாறிவிடும் என்பதாகும். அவர்களுடைய நிரந்தரமான வீடுகள் காலால் நடந்துபோகும் தூரத்தில் உள்ளன. ஆயுதப் படைகள் அதனை அனுமதிப்பார்களேயானால் அவர்கள் மகிழ்ச்சியாக தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியும். திரு.ஹோல்ம்ஸ் ஏன் இதனை விளங்கிக் கொள்ளாது, மறுத்து வருகின்றார் என்பது புரியவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இடம்பெயர்ந்த மக்களை மேற்கூறிய கிராமங்களில் பணயக் கைதிகளாகவோ, மனிதக் கேடயமாகவோ, அல்லது முகாமில் வாழ்பவர்களாகவோ வைத்திருக்கவில்லை என்பதை மீளவும் வலியுறுத்திக் கூறுவது எங்களுடைய கடமையாகும். வன்னியில் இருக்கின்ற மக்கள் நாங்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற மக்கள் தங்களுடைய சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வாழ்கின்றார்கள். துன்பங்களைத் தாங்குகின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்விதமாக வாழச் சொல்லுகின்றார்களோ, அவ்விதமாக வாழ விரும்புகின்றார்கள்.
நாங்கள் எந்தவொரு விதத்திலும் எங்களையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. திரு. ஜோன் ஹோல்ம்ஸ் வன்னி மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர், அல்லது விடுதலைப் புலிகளால் படைகளுக்குச் சேர்க்கப்படுகின்றார்கள் என்று கூறுவதெல்லாம் ஆதாரங்கள் அற்ற வதந்திகள் ஆகும். நாங்கள் இங்கு எங்களுடைய சொந்த விருப்பில் வாழ்கின்றோம். நாங்கள் எங்களுடைய வாழ்வை, எமது நம்பிக்கைகளை எமது சொந்த விருப்பில் செய்கின்றோம்.
எமது வாழ்வும், எமது தலைவிதியும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்ததாகவே உள்ளது. உலகம் சிறீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை முகவர்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களையும் வன்னியில் இருந்து வெளியேறுமாறு நாள் குறித்து வற்புறுத்தியபோதும், அவர்கள் வன்னியைவிட்டு விலகிய போதும், கண்மூடித்தனமாக மௌனம் காத்தது மிகப்பெரிய ஆரம்பத்தவறாகும். சூடான் அரசாங்கம் வெளியேறச் சொன்ன பின்னரும் டார்பூரில் பிரான்சின் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு அங்கு தொடர்ந்தும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
வன்னியைப் பொறுத்தமட்டில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்களும் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆணைக்கு அடிபணிந்து மிக வேகமாக வன்னியில் இருந்து ஓடினர். அவர்கள் அவ்வாறு செய்யாது மக்களின் வாழ்வுக்கு ஆபத்தான சூழலிலும் எம்முடன் நின்று எமக்குப் பணியாற்றியிருக்க வேண்டும். இது ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்களும், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும் வன்னியில் செயற்படுவது பற்றி ஒரு முக்கிய விமர்சனமாக உள்ளது. சிறீலங்கா அரசாங்கம் காணாமல் போக வைப்பதிலும், ஊடகவியலாளர்களைக் கொல்வதிலும் அதிகளவு பெயரினைப் பெற்றிருக்கின்றது. அத்துடன், அனைத்துலக அவதானிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பதும் அரசாங்க அதிகாரிகளின் தலையீடு இல்லாது அனுமதிக்கப்படுபவர்கள்கூட மக்களுடன் தொடர்புகொள்ள அனுமதியாது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினந்தோறும் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், உணவு, மருந்து மறுப்பினாலும் நிலைகொள்ள முடியாத மக்கள் சிறிய எண்ணிக்கையில் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்றார்கள். அவர்கள் எவ்விதமாக அரசாங்கப் படைகளால் நடத்தப்படடனர் என்பது ஐக்கிய நாடுகள் சபைக்கும், அதனது முகவர்களுக்கும் நிலமையை சீரழிப்பதற்கு ஏற்றதாக இருக்கின்றது. எங்களுக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பிரிக்கப்பட்டு, இறுக்கமான கட்டுப்பாடு உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதால், அந்த குடும்பங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீளவும் எமக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் பெண்கள் பாலியல் அடிமைகளாகவும், ஆண்கள் கூலியற்ற வேலையாட்களாகவும் உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திக்கு ஏற்ப சுதந்திர நடமாட்டம் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்கின்ற கொட்டகைகள் சுற்றிவர முட் கம்பிகளால் பாதுகாக்கப்பட்டு படையினரால் காவல் செய்யப்படுகின்றது. உள்ளே நுழைவதும், வெளியே செல்வதும் மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் விளங்கிக்கொண்டதன்படி சில ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் படைப் புலனாய்வு அதிகாரிகளுடனும், அரசாங்க அமைச்சர்கள் , அரசாங்கத்தினுடைய ஏனைய ஆட்கள் ஆகியோருடன் இந்த முகாம்களுக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் வருவதற்கு முன்னரே அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையுமே அதிகளவில் வருபவர்களுடன் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் வவுனியா முகாம்களுக்குச் சென்றபோது தாங்கள் நம்பக்கூடிய தங்களுடைய மொழிபெயர்பாளர்களை அழைத்துச் செல்லாது, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மொழி பெயர்ப்பிலேயே தங்கியிருந்தனர். அங்கு வெளிவந்த ஒரு சம்பவத்தின்படி கூடச்சென்ற முஸ்லீம் அமைச்சர் ஒருவர் அங்கு தமிழில் கூறப்பட்டவற்றை தமக்கேற்றவகையில் மாற்றியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார். இந்த மாதிரியான பணிகளையே ஐக்கிய நாடுகள் சபை தற்பொழுது எங்கள் பகுதிகளில் செய்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபை அதனுடைய இளமையில் இருந்த உறுதியான போக்கை இழந்து தற்பொழுது அதன் அலுவலர்கள் நேரத்தைக் கடத்துபவர்களாகவே செயலாற்றுகின்றார்கள் என்பது மனவருத்தத்துடன் கூறப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
நாங்கள் கேட்க விரும்புகின்றோம், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் எந்தப் பிரிவின் கீழ் அரசாங்கத்தினால் நடத்தப்படும் இந்த நலன்புரி நிலையங்களில் குடும்பங்களை ஆண், பெண், குழந்தைகள் என்ற பாலியல் அடிப்படையில் பிரிக்கின்றனர். தந்தை ஒரு இடத்திலும், தாயார் இன்னொரு இடத்திலும், பிள்ளைகள் இன்னொரு இடத்திலும் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆண் குழந்தைகள் தகவல்களுக்காக வதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகள் கிரமமாக படை அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இடை நிறுத்தாது படை அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவரை ஏபி (AP) செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி கணிசமானளவு பெண்கள் அநுராதபுரத்திற்கு இடமாற்றப்பட்டு அங்கு அரசாங்கத்தினால் நடத்தப்படும் விபச்சார விடுதிகளில் படை அதிகாரிகளுடைய மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றார்கள். இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை வழித்தெழிந்து அவர்களின் பொறுப்பை உணர்ந்து அரச சார்பற்ற நிறுவனங்களை இது பற்றி விசாரணை செய்யுமாறு கோரியிருக்க வேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்களைக்கொண்டு விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவுமே செய்யப்படவில்லை.
நலன்புரிதல் என்ற சொல் சிறீலங்கா அரசாங்கத்தின் நிலையங்களில் அதற்கேற்ற பொருளுடன் பயன்படுத்தப்படுவதில்லை. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போவர் (Boer) போரின்போதும், 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும் நாசிகளாலும் நடாத்தப்பட்ட வதை முகாம்களையே இவை நினைவுபடுத்துகின்றன. நலன்புரி நிலையங்களுக்கும், முட்கம்பிச் சுருள்களுக்கும் என்ன தொடர்பு என நாங்கள் யாராவது கேட்கலாம் அல்லவா? மேலும் இந்த நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள ஆண்களும், முதிய பெண்களும் படையினருக்கு கட்டாய வேலை செய்விக்கப்பட்டு அதற்காக ஒரு தட்டு உணவுகூட வழங்கப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.
அரசாங்கம் தாங்கள் சுடுதிறன் பயன்படுத்தாத பாதுகாப்பு பிரதேசங்களை உருவாக்கியிருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்வது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இவைகள் கழிவு, மணல் பிரதேசமாகவும், மக்கள் குடியிருப்புக்கு தகுதியற்ற நிலங்களாகவும், எந்தவொரு பயிர்ச்செய்கையும் மேற்கொள்ள முடியாத இடங்களாக உள்ளன. இதனால் நோய்கள் தோன்றி இளம் சந்ததி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் ஒரு கிழமைக்கு மேல் வாழ்ந்தவர்கள் யாருமே நீண்ட நாட்களுக்கு வாழ்வார்கள் என்கின்ற நம்பிக்கை இழக்கப்பட்டுவிடும். மனிதாபிமானத் தலையீடு மூலமே இந்த மனித அழிவு தடுக்கப்படலாம் என்பதை அனைத்துலக சமூகத்திற்கு நாம் வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.
இந்தக் கணினி யுகத்தில் அனைத்துலக சமூகத்தால் ஏன் இதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது எமக்கு விளங்காத ஒன்றாக இருக்கின்றது. திரு.ஹோல்ம்சும் அவருடைய மற்றையவர்களும் பாதுகாப்புப் பிரதேசம் என்பது பெயரளவில் மட்டும்தான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கிராமங்கள் தினமும் நெடுந்தூர சுடு கலன்களாலும் (ஆட்டிலறி), பல்குழல் எறிகணைகளாலும் வெள்ளையுர குண்டுகளாலும், மோட்டார் தாக்குதல்களாலும், கிபீர் மற்றும் மிக் வானூர்திக் குண்டு வீச்சுக்களாலும் தாக்கப்படுவது அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரதேசம் என்ற சொல் பொய்யானது என்பதை வெளிப்படுத்துகின்றது.
அரசாங்கம் புத்தியான முறையில் தினமும் கொல்லப்படும் மற்றும் காயமடையும் மக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி வெளியிட்டு அனைத்துலகின் குரல் எழாதவாறு தடுக்கின்றது. சிறீலங்கா அரசுத் தலைவர் மிக அபாயகரமான வார்த்தைகளைப் பிரகடனப்படுத்தினார். அவர் விரும்பினால் பாதுகாப்புப் பிரதேசங்களிலுள்ள மக்களை 24 மணித்தியாலங்களுக்குள் முற்றாக அழிக்கலாம் என்று கூறினார். அவர் ஏன் இன்னும் அதனைச் செய்யவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்விதமான காட்டுமிராண்டித்தனங்கள் அனைத்துலக மட்டத்தில் ஏன் வெளிக்கொண்டு வரப்படவில்லை? அல்லது ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் இது குறித்து தட்டிக்கேட்கவில்லை? இந்தப் பாதுகாப்புப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் கிடங்குகளுக்குள்ளும், பதுங்ககழிகளுக்குள்ளும், சேற்றுக் குழிகளிலும் வாழ்ந்துதான் சிறீலங்கா படைகளால் செலுத்தப்படும் உயிராபத்தான ஏவுகணைகளில் இருந்து நாலு கிராமத்திலும் தப்பிப் பிழைக்கின்றனர்.
இருந்த போதிலும் சாகின்ற தொகையும், காயப்படுகின்ற தொகையும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. வியட்னாம் போரின்போது னுஆணு இலும், அதனைச் சுற்றி வாழ்ந்த மக்களும் இவ்விதமாக நிலத்துக்குக் கீழேயே வாழ்ந்தார்கள். நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் திரு.ஜோன் ஹோல்ம்ஸ் வியட்னாம் போரைப் பற்றி அறிந்தபோது இதனையும் அறிந்திருப்பார் என. அனைத்துலக சமூகம் போர் சூழலில் வாழும் மக்களின் துன்பங்களையும், வரலாற்றையும் ஒப்பிடுகின்ற உணர்வுள்ளவர்களாக இருப்பார்களேயானால் வன்னியின் நிலை தொடர அனுமதிக்க மாட்டார்கள்.
முடிவாக... இலோனியஸ் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் அனைத்துலக சட்டத்தில் பேராசிரியராக விளங்கும் பேராசிரியர் முனைவர் பொயில் (Dr.Boyle) அவர்களின் சில வார்த்தைகளுடன் இதனை முடிக்கலாம் என எண்ணுகின்றோம். "சிறீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜபக்ச, பாதுகாப்புப் பிரதேசத்தில் வாழும் 350,000 தமிழ் மக்களினதும் அனைத்துலக மனிதாய சட்டங்களின் அடிப்படையிலான பெரும்பாலான அடிப்படைத் தேவைகளை மீறி வன்முறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றார். சிறீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் அனைத்து மருத்துவர்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரையும் வன்னியில் இருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டார்.
சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சர் வன்னியில் அழிக்கப்பட வேண்டிய தமிழர்களின் பட்டியலையும் தயாரித்திருக்கின்றார். உலக அரசுகள் உடனடியாக ஆற்றலுள்ள முறையில் செயற்பட்டு சிறீலங்கா அரசாங்கத்தைத் தடுத்து நிறுத்தாது விட்டால், உலகின் சேர்பனிக்கா (Srebrenica), சப்ரா (Sabra), சற்றிலா (Shattila), றுவண்டா (Rwanda), கொசோவாவின் (Kosovo) வரிசையில் தமிழர்களும் இன அழைப்பிற்கு உள்ளாக்கப்படுவதற்கு சாட்சியம் கூற வேண்டிய நிலை ஏற்படும்.
(பேராசிரியர் பொயிலின் முழுஅளவிலான செய்தியையும் படிக்க விரும்புவர்கள் கீழுள்ள கணனி இணைப்பிற்கு சென்று படிக்கவும்)
http://tamilnet.com/art.html?catid=79&artid=28686
நன்றி
கையொப்பம் கையொப்பம் Dr. நித்தியானந்தசர்மா கோபாலகிருஸ்ணன் MA (தலைவர்) (செயலர்)
[www.sankathi.com]
திகதி: 05.04.2009 // தமிழீழம் // [வன்னியன் ]
வன்னியின் தற்போதைய அவல நிலை குறித்து வன்னித் தமிழர் பேரவை திறந்த மடல் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான செயலர் ஜோன் கொல்ம்சிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வன்னித் தமிழர் பேரவையின் தலைவரும் செயலாளரும் கையொப்பமிட்டு, சிறிலங்காவின் பொய் பரப்புரைகளுக்கும், சர்வதேசத்தின் தவறான புரிந்துணர்வுகளுக்கும் விளக்கமளிக்கும் வகையில் வன்னி நிமைகளை, மக்களின் அவலங்களை விளக்கி நீண்ட அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் தமிழ் மொழியாக்கத்தைத் தருகின்றோம்.
பெறுநர்:-
கலாநிதி ஜோன் ஹோல்ம்ஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலர்
ஒச்சாயு.
என்ஜேனீவா
சுவிற்சர்லாந்து
பெருமதிப்பிற்குரிய ஐயா,
"திறந்த மடல்"
ஜோன் ஹோம்ஸ் தன்னைத் தப்பிப்பிழைக்கும் தந்திரக்கலையில் வல்லோன் எனத் தானே நிரூபித்து நிற்கின்றார். முன்னர் ஒருதடவை ராஜபக்ச அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சரே அவரைத் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் பணம் பெறும் அவர்களின் முகவர் எனக் குற்றம் சாட்டியிருந்தார். இன்று அவரோ ராஜபக்சவின் முகவராகத் தானே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமளவுக்கு அந்த வகையில் தன்னுடைய அறிக்கைகளை வெளியிடுவதையே தன்னுடைய இலக்காகவும் நோக்காகவும் கொண்டு அண்மைக்காலங்களில் செயற்பட்டு வருகின்றார்.
வெறுமனே சிறிலங்காவின் பரப்புரை யந்திரத்திலிருந்து கிடைக்கும் ஆதார சான்றுகளற்ற அறிக்கைகளைக் கொண்டே தனது அறிக்கைகளை அளிக்கின்றார். வன்னி மக்கள் முகங்கொடுத்து நிற்கும் அவர்களது உடனடிப்பிரச்சினைகனைச் சந்திப்பதற்குப் பதிலாக களநிலை உண்மைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலைப்பாடுகளை அவர் எடுக்கின்றார் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
வன்னி மக்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் பாதுகாப்பைப் பேணல், உணவு மருந்து தேவைகளைப் பூர்த்தி செய்தல் என்பனவற்றுக்கு உத்தரவாதம் அளிக்காது அதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கத்திலிருந்து வேறுபாடில்லாத நிலைகளையே அவர் எடுத்து வருகின்றார். அவரது அறிக்கையில் வன்னி மக்களின் விருப்பத்திற்கு மாறாக வன்னி மக்களைத் தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வைத்துள்ளனர் எனச் சலஞ்சாதிக்க முயல்கிறார். அதேவேளை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வன்னி மக்களுக்கு சிறப்பான வாழ்வு உள்ளதென்பது போலவும் காட்டப்பார்க்கின்றார்.
அதே அறிக்கையில் வன்னி மக்களைப் போக விடுமாறு தமிழீழ விடுதலைப்புலிகளைக் கோருவதையும் பலவந்தமாகப் படையில் சேர்ப்பதை நிறுத்தும்படியும் மனித கேடயமாக மக்களைப் பயன்படுத்த வேண்டாமெனவும் அவர் கேட்டுள்ளார். வன்னிக்கு வருகை தராமலும் வன்னி மக்களைச் சந்திக்காமலும் அவர்களுடைய விருப்புக்களையும் தேவைகளையும் கண்டறியாமலும் இந்தத் தவறான தகவல்களை அவர் எங்கிருந்து பெற்றார் என நாம் கேட்க விரும்புகின்றோம். திரு ஹோம்ஸ் புனை கதைகளை உரைக்கின்றார் அல்லது அரசாங்கத்தின் வழமையான பரப்புரைகளையே அவரும் கூறுகின்றார் என நாம் துணிந்து கூறுகின்றோம்.
வன்னிப் பிரச்சினை போன்ற வேறு எந்தச் சர்வதேசப் பிரச்சினைக்காவது பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது பாரம்பரிய தாயகத்திலிருந்து வெளியேறி வேறு பகுதிகளுக்குச் சென்று திருப்பதிகரமான தீர்வைக் பெறும்படி கேட்கப்பட்டுள்ளதா என நாம் ஹோம்ஸைக் கேட்க விரும்புகின்றோம். பலஸ்தீன மக்களின் பிரச்சினையில் அவர்களை உலகின் வேறு எந்தப் பகுதிக்காவது சென்று அவர்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்பட்டதா? வரலாற்றை ஆழமாகப் பார்ப்பின் யூதர்களுக்கு மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலுக்கு மாற்றாக கலிபோர்னியாவில் வாழுமாறும் உகண்டாவில் வாழுமாறும் கேட்கப்பட்டபோது அவர்கள் எதற்காக அதனை மறுத்தார்கள்? காரணம் இஸ்ரேல் அவர்களின் ஆன்மீகப் பூமி. அதே மான நரம்பு வன்னி மக்களுக்கும் இருக்கையில் திரு ஜோன் ஹோம்ஸ் போன்ற சிந்தனையாழமற்றவர்கள் வன்னி மக்களை அவர்களுடன் பின்னிப்பிணைந்த வீடுகளையும் அவர்கள் தாயகத்தையும் விட்டு வெளியேறும்படி கேட்கையில் மறுப்பார்கள் தானே.
எங்கள் எண்ணப்படி ஐ.நா வுக்கு அண்மைக்காலங்களில் அதன் பிடி தளர்ந்து விட்டது. தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்காக உலகின் சிறுபான்மையினப் பிரச்சினைகளைச் சந்திக்க மறுக்கிறது. சிறுபான்மையினங்கள் தங்கள் முன்னோர்களின் தாயகத்தில் வாழும் உரிமை உண்டு ஜோன் ஹோம்ஸ்ம் அவரது மேலதிகாரிகளதும்; விருப்புகளுக்கு ஏற்ற கூத்துக்களிலும் கவர்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை ஐ நாவின் உயர்மட்டங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபை இன்று கையாலாகாத அமைப்பாகியுள்ளது. அதன் அதிகாரிகள் தாங்கள் தங்கள் பதவிக்குப் பெறும் பணத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக மட்டுமே உள்ளனர். இந்த இடத்தில் ஜோன் ஹோம்ஸ்க்கு ஒன்றை நினைவுறுத்த விரும்புகின்றோம். வன்னி நிலம் உலகின் மிக மோசமான கொலைக்களமாகக் காட்சியளிக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் எவ்வித அக்கறையுமின்றி தினம் தினம் 50 முதல் 60 க்கு மேற்பட்ட தமிழரைக் கொன்றும் 100 முதல் 150 க்கு மேற்பட்ட தமிழரின் உடலுக்குச் சேதம் இழைத்தும் வருகின்றது. திரு ஜோன் ஹோம்ஸ் நன்கு படித்தவர் நிறைந்த நிர்வாக அனுபவம் உள்ளவர் பரப்புரைகளுக்கு ஊடாக உண்மைகளைக் கண்டறியும் மதிநுட்பம் உள்ளவர் என்பதை நாங்கள் ஏற்கின்றோம். இவ்வளவு உயர்ந்த திறமைகளை எல்லாம் கொண்ட ஜோன் ஹோம்ஸால் வன்னியில் மக்கள் கொன்று குவிக்கப்படுவதை மட்டும் கண்டுக்கொள்ள இயலவில்லையே என்பது பலத்த ஏமாற்றத்தை எங்களுக்குத் தருகிறது.
இந்தக் கொலைக்களம் சர்வதேச குரல்கள் எழாதவாறு செய்து கொண்டு வன்னியின் சனத்தொகையை குறைத்து மெதுவான முறையில் இனஅழிப்பைச் செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகமான இனஅழிப்பா மெதுவான இனஅழிப்பா என்பதல்ல எந்த வகையான இனஅழிப்பும் நவீன உலகால் முழுஅளவில் கண்டிக்கப்பட வேண்டியதாக உள்ளது. இதனை ஜோன் ஹோம்ஸ் செய்யவில்லை என்றால் அது அவரின் சிந்தனை வெறுமையையே வெளிப்படுத்துகின்றது. ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் எதற்காக இந்த நாட்டின் இனஅழிப்பைக் கண்டிக்க மறுக்கிறார்கள்?
வன்னி மக்களில் பெரும்பாலனாவர்கள் மாதக்கணக்கில் மெதுவான இனஅழிப்புச் செய்யப்பட்டதன் பின் கூட்டு மொத்தமாகக் குரல் எழுப்பலாமெனச் சர்வதேச சமுகம் நம்புகின்றதா?சத்தற்ற உணவென்பது மெல்லச் சாகடிப்பதற்கு மறுபெயர். வன்னி மக்கள் சத்தற்ற உணவின் பிடியில் சிக்கியுள்ளனர். தோலுரிக்கப்படாத சோயாவும் உமியகற்றப்படாத அரிசியும் பருப்பும் தினம் உண்டு அவர்கள் உயிர்பிழைக்கின்றனர். உணவின் கலோரி பெறுமதிகள் பற்றிப் பேசும் மேற்குக்கு வன்னியில் மக்கள் சத்தின்றி சாவதைக் காண முடியாது இருக்கும் ஜோன் ஹோம்ஸ் போன்றவர்கள் அவர்கள் வகிக்கும் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு எந்த அளவுக்கு இந்நேரத்தில் தகுதியுடையவர்கள் என்று எண்ணத் தோன்றவில்லையா?
வன்னி மக்கள் மேல் வீசப்படக் கூடாதெனத் தடுக்கப்பட்டுள்ள கொத்தணிக் குண்டுகள் வெள்ளைப் பொசுப்பரஸ் குண்டுகள் நச்சு வாயு உருளைகள் தரையாலும் கடலாலும் வானாலும் கொட்டப்படுதைக் ஹோம்ஸ் தன்வசதிக்கேற்றவாறு கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்.
சிறிலங்கா அரசாங்கம் வைத்தியசாலைகள் மேல் குண்டுகளை வீசுவதையும் திரள்நிலை அளவில் அங்குள்ள நோயாளிகளைக் கொல்வதையும் நியாயப்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் நியாயப்படுத்தலைக் கண்டிக்கவோ அல்லது இத்தகைய குண்டு வீச்சுக்கள் இடம்பெறாதவாறு தடுக்கவோ அதுவரை ஐ நா உட்பட எந்தச் சர்வதேச அமைப்பும் முயற்சிக்கவில்லை. இரண்டாவது உலக மகாயுத்தத்தில் எதிரிகளின் படைகள் வைத்தியசாலைகளைத் தாககுவதைத் தவிர்த்தன. சிறிலங்காவுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்களிக்கபட்டுள்ளதா? அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் வைத்தியசாலைகளைத் தாககுவதைக் கூட தவிர்க்க ஐ நா வால் ஏன் முடியவில்லை? வேறு மொழியில் கூறுவதானால் வன்னி மெதுவாக வைத்தியசாலைகள் அற்ற பிரதேசமாக மாற்றப்பட்டு வருகிறது.
உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலாவது இதற்குச் சமானமானதாக உள்ளதா? ஹோம்ஸையே இதற்குப் பதிலளிக்க விட்டுவிடுவோம். வன்னியில் இன்று வைத்தியசாலைகள் மரங்களின் கீழும் இடம்மாற்றக் கூடிய கூடாரங்களிலும் ஒளிவிடங்களிலும் நடைபெறுகின்றது. குறைந்த உபகரணங்களுடனும் பொருத்தமற்ற மருந்துகளுடனும் மருத்துவர்கள் மிக அதிக அளவான நோயாளிகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தினதும் அதன் சுகாதர அமைச்சினதும் மருந்துகளுக்கான தடைகளினாலேயே பொருத்தமான மருந்துகளுக்கு வன்னியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தை இறப்பு வீதம் ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாக உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்க்குச் சத்தின்மையினால் குறைப்பிரசவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில வாரங்களில் 12 பேர் பட்டினியால் இறந்துள்ளனர் என உள்ளுர் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 21ம் நூற்றாண்டு இவை முழு மனித குலத்துக்குமே அவமானமாகிறது.
மருந்துகள் சுகப்படுத்தலுக்கான கருவிகள். ஆனால் சிறிலங்காவில் மருந்துகள் உயிர் ஆபத்தை விளைப்பதற்கான கருவிகள். சிறிலங்கா அரசாங்கம் வன்னிக்கு எல்லாவிதங்களிலும் சகல முயற்சிகளையும் எடுத்து வன்னிக்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்கள் செல்லாதவாறு தடுத்து வருகின்றது. சிறிலங்கா தன்னுடைய மருத்துவ நிலையங்களை கடலுக்கு அப்பால் திருகோணமலையில் ஏற்படுத்தி அங்கு தன்னால் குண்டுவீசப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கிறது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது நிறுவனரின் பார்வையில் இருந்து விலகி வன்னியிலிருந்து திருகோணமலைக்கு காயப்பட்டவர்களுக்கு கடற்பயணத்துக்கு உதவி வருகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வேறு மொழியில் கூறுவதானால் அரசாங்கத்தின் காயப்படுத்தி விட்டு அவர்களை காயமுற்ற பகுதிகளுக்கு வெகுதூரத்தில் கடலுக்கு அப்பால் உள்ள வைத்தியாலைகளுக்குக் காவிச் செல்லும் முயற்சியில் தன்னையறியாமலே ஒரு அங்கமாகி நிற்கிறது.
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட கப்பலில் கடலால் திருகோணமலைக்கும் அதற்கு அப்பாலும் எடுத்துச் செல்லப்பட்ட பொழுது கப்பலில் இறந்தவர்கள் பலர் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்திய அரசாங்கம் புல்மோட்டையில் அண்மையில் ஒரு வைத்தியசாலையைத் திறந்து வன்னியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் எடுத்து வரப்படும் காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. எமக்கு கிடைக்கப் பெற்ற நம்பகமான தகவல்களின் படி அங்கு கூறப்பட்டவாறு வைத்தியசாலை திறக்கப்படவில்லை எனவும் அங்கு தகவல் திரட்டும் புலனாய்வு நிலையமே திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.இந்த விபரிப்பில் நாம் ஏற்கனவே கூறியவாறு வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுகள் அங்குள்ள மக்களின் தேவைகளுக்குப் போதாதுள்ளது. நாம் ஏற்கனவே கூறியவாறு மக்கள் சத்துணவு இன்மையால் பாதிப்புற்றுள்ளனர். பச்சை இலைகளோ அல்லது மரக்கறிகளோ சமைப்பதற்கோ உண்பதற்கோ அங்கு இல்லை. இந்த உதவிகள் ஏதுமற்ற மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் உடல்நலம் பெற நீண்டகாலம் எடுக்கும். சத்துணவின்மையாலும் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதாலும் அடிக்கடி நடைபெறும் இடப்பெயர்வுகளாலும் வன்னியில் கல்வி நிலை தேக்கமடைந்துள்ளது. இது ஜோன் ஹோம்ஸ் கருத்தில் எடுக்காத மற்றொரு மனித அவலமாக உள்ளது.
அரசாங்கம் மத்தாளன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய மெல்லிய கரையோரக் கிராமங்களை சுடுதிறன் பாவியாத கிராமங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆயினும் மீனவர்கள் எவருக்கும் கடலில் இறங்குவதற்குத் துணிவு இல்லை. ஏற்கனவே கடலில் இறங்கிய மீளவர்களைச் சிறிலங்காக் கடற்படையினர் சுட்டழித்ததன் வழி வந்த மன அச்சம். நாளாந்தம் பிடிபடும் மீனின் அளவு மிகக் குறைவாக இருப்பதுடன் மத்தியதர வர்க்கத்தினரால் நுகரப்பட இயலாத அளவுக்கு விலை உயர்வாக உள்ளது. இந்தப் பகுதிகள் 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிப்பதால் அதிக நெருக்கமானதாக உள்ளது.
நிலம் வெறுமையானதாகவும், வசதிகள் ஏதுமற்றதாகவும், பெரும் பகுதி மனித வசிப்பிடத்திற்கு ஏற்றதல்லதாகவும் இருக்கின்றது. ஆயினும் மக்கள் அதில் ஒட்டிக்கொண்டிருப்பது, இது அவர்களுடைய தாயகம் என்பதனால், ஹோல்ம்ஸ் கூறுவது உண்மையாக இருப்பின் தமிழர்கள் எப்பொழுது இந்த மண் கழிவுகள் நிறைந்த பகுதியைக் கைவிட்டு வாக்களிக்கப்பட்ட அரச பகுதிக்கு சென்றிருப்பார்கள். விடுதலைப் புலிகள் அவாக்ளைத் தடுத்து வைத்திருக்கவில்லை. மக்கள் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிக்க முடியாத தன்மையுடையவர்களாக இருக்கின்றார்கள். மக்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பான வாழ்வு விடுதலைப் புலிகளுடன் தங்கியிருப்பதில்தான் உள்ளது என்பதுடன், நம்ப முடியாத அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளைப் பின்பற்றுவதில்லை என்பதில் தெளிவான இருக்கின்றார்கள்.
நாங்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும். அங்கு 2 முதல் 2.5 அங்குலம் நீளமான மெல்லிய மீன்கள்தான் உண்டு. இதனுடைய சுவை விளங்கிக்கொள்ள முடியாததாக இருக்கும். இந்த மீன்கூட ஒரு கிலோ 2,000 ரூபாவிற்கே கிடைக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய மீன்கள் மிருக தீனியாகவோ அல்லது உரமாகவோகூட பயன்படுத்தப்படுவதில்லை. இந்த விபரங்களை எல்லாம் எதற்காக இங்கு சமர்ப்பிக்கின்றோம் என்றால் இந்த மக்களின் வாழ்க்கை முறையை ஜோன் ஹோல்ம்ஸ் விளங்கிக்கொள்ள முடியாது இருக்கின்றார் என்தற்காகவே.
திரு.ஹோல்ம்ஸ் வன்னி மக்களை முற்றாக திரள் நிலையில் கிளப்பியெடுத்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய வவுனியா, மன்னாருக்கு செல்ல வைப்பதால் பிரச்சினையைத் தீர்க்கலாம் என கருதுகின்றார். இது ஒருபோதும் ஏற்புடைய தீர்வாகமாட்டாது. ஏங்களுடைய மக்களை கிளப்பியெடுத்து தூர தேசங்களில் குடியமர்த்துவது தேசியத் தீர்வாகக் காட்டப்படுமானால், இதுவொரு தொடர்ச்சியான தொடர்முறை நிகழ்ச்சியாகவே மாற்றப்பட்டுவிடும். நாங்கள் திரு.ஹோல்ம்ஸிற்கு எவ்வாறு யு.என்.எச்.சி.ஆர் மக்களை அவர்களது சொந்த வீடுகளில் குடியமர்த்துவதற்கு முயற்சித்தது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அதுவே சரியான முறையில் செயற்படுவதற்கான வழியாகும். வன்னியிலுள்ள மக்களுக்கு சுகாதாரமான சுற்றாடல், உணவு, மருந்து, பாதுகாப்பான வாழ்வு ஆகியவையே தேவையாக இருக்கின்றது. அரசாங்கம் தன்னுடைய சொந்தப் படைகளைக் கொண்டு மக்களுக்கு கைநீட்டி ஆணையிடுவது போல் ஆயுதப் படைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் கொண்டு சென்று அந்த முகவர்கள் ஊடாக குடியமர்த்தப்பார்க்கின்றது. திரு.ஹோல்ம்ஸ் அவருடைய புத்தி நுணுக்கத்தன்மையினால் இந்த திட்டமிட்ட முறைமையை இனம் கண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
திரு.ஹோல்ம்ஸிற்கு வன்னி மக்களது நலனில் ஏதாவது அக்கறை இருக்குமாக இருந்தால் அவர் செய்ய வேண்டியது எல்லாம், அவர்களுக்கு போதிய சத்துணவும், பாதுகாப்பான வாழ்வும், நிரந்தரமான அமைதியும் வழங்குவதாகவும். நாங்கள் திரும்பவும் திரும்பவும் வலியுறுத்துவது என்னவென்றால் மக்களை அவர்களுடைய இடங்களில் இருந்து கிளப்புவதோ அல்லது பயணப்பட வைப்பதோ தீர்வாக அமையாது, மாறாக தண்டனையாகவே மாறிவிடும் என்பதாகும். அவர்களுடைய நிரந்தரமான வீடுகள் காலால் நடந்துபோகும் தூரத்தில் உள்ளன. ஆயுதப் படைகள் அதனை அனுமதிப்பார்களேயானால் அவர்கள் மகிழ்ச்சியாக தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியும். திரு.ஹோல்ம்ஸ் ஏன் இதனை விளங்கிக் கொள்ளாது, மறுத்து வருகின்றார் என்பது புரியவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இடம்பெயர்ந்த மக்களை மேற்கூறிய கிராமங்களில் பணயக் கைதிகளாகவோ, மனிதக் கேடயமாகவோ, அல்லது முகாமில் வாழ்பவர்களாகவோ வைத்திருக்கவில்லை என்பதை மீளவும் வலியுறுத்திக் கூறுவது எங்களுடைய கடமையாகும். வன்னியில் இருக்கின்ற மக்கள் நாங்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற மக்கள் தங்களுடைய சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வாழ்கின்றார்கள். துன்பங்களைத் தாங்குகின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்விதமாக வாழச் சொல்லுகின்றார்களோ, அவ்விதமாக வாழ விரும்புகின்றார்கள்.
நாங்கள் எந்தவொரு விதத்திலும் எங்களையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. திரு. ஜோன் ஹோல்ம்ஸ் வன்னி மக்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர், அல்லது விடுதலைப் புலிகளால் படைகளுக்குச் சேர்க்கப்படுகின்றார்கள் என்று கூறுவதெல்லாம் ஆதாரங்கள் அற்ற வதந்திகள் ஆகும். நாங்கள் இங்கு எங்களுடைய சொந்த விருப்பில் வாழ்கின்றோம். நாங்கள் எங்களுடைய வாழ்வை, எமது நம்பிக்கைகளை எமது சொந்த விருப்பில் செய்கின்றோம்.
எமது வாழ்வும், எமது தலைவிதியும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்ததாகவே உள்ளது. உலகம் சிறீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை முகவர்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களையும் வன்னியில் இருந்து வெளியேறுமாறு நாள் குறித்து வற்புறுத்தியபோதும், அவர்கள் வன்னியைவிட்டு விலகிய போதும், கண்மூடித்தனமாக மௌனம் காத்தது மிகப்பெரிய ஆரம்பத்தவறாகும். சூடான் அரசாங்கம் வெளியேறச் சொன்ன பின்னரும் டார்பூரில் பிரான்சின் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு அங்கு தொடர்ந்தும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
வன்னியைப் பொறுத்தமட்டில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்களும் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆணைக்கு அடிபணிந்து மிக வேகமாக வன்னியில் இருந்து ஓடினர். அவர்கள் அவ்வாறு செய்யாது மக்களின் வாழ்வுக்கு ஆபத்தான சூழலிலும் எம்முடன் நின்று எமக்குப் பணியாற்றியிருக்க வேண்டும். இது ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்களும், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களும் வன்னியில் செயற்படுவது பற்றி ஒரு முக்கிய விமர்சனமாக உள்ளது. சிறீலங்கா அரசாங்கம் காணாமல் போக வைப்பதிலும், ஊடகவியலாளர்களைக் கொல்வதிலும் அதிகளவு பெயரினைப் பெற்றிருக்கின்றது. அத்துடன், அனைத்துலக அவதானிகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அனுமதி மறுப்பதும் அரசாங்க அதிகாரிகளின் தலையீடு இல்லாது அனுமதிக்கப்படுபவர்கள்கூட மக்களுடன் தொடர்புகொள்ள அனுமதியாது இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினந்தோறும் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், உணவு, மருந்து மறுப்பினாலும் நிலைகொள்ள முடியாத மக்கள் சிறிய எண்ணிக்கையில் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்றார்கள். அவர்கள் எவ்விதமாக அரசாங்கப் படைகளால் நடத்தப்படடனர் என்பது ஐக்கிய நாடுகள் சபைக்கும், அதனது முகவர்களுக்கும் நிலமையை சீரழிப்பதற்கு ஏற்றதாக இருக்கின்றது. எங்களுக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பிரிக்கப்பட்டு, இறுக்கமான கட்டுப்பாடு உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதால், அந்த குடும்பங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீளவும் எமக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் பெண்கள் பாலியல் அடிமைகளாகவும், ஆண்கள் கூலியற்ற வேலையாட்களாகவும் உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திக்கு ஏற்ப சுதந்திர நடமாட்டம் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்கின்ற கொட்டகைகள் சுற்றிவர முட் கம்பிகளால் பாதுகாக்கப்பட்டு படையினரால் காவல் செய்யப்படுகின்றது. உள்ளே நுழைவதும், வெளியே செல்வதும் மறுக்கப்பட்டுள்ளது. நாங்கள் விளங்கிக்கொண்டதன்படி சில ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் படைப் புலனாய்வு அதிகாரிகளுடனும், அரசாங்க அமைச்சர்கள் , அரசாங்கத்தினுடைய ஏனைய ஆட்கள் ஆகியோருடன் இந்த முகாம்களுக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் வருவதற்கு முன்னரே அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதையுமே அதிகளவில் வருபவர்களுடன் பேசக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் வவுனியா முகாம்களுக்குச் சென்றபோது தாங்கள் நம்பக்கூடிய தங்களுடைய மொழிபெயர்பாளர்களை அழைத்துச் செல்லாது, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மொழி பெயர்ப்பிலேயே தங்கியிருந்தனர். அங்கு வெளிவந்த ஒரு சம்பவத்தின்படி கூடச்சென்ற முஸ்லீம் அமைச்சர் ஒருவர் அங்கு தமிழில் கூறப்பட்டவற்றை தமக்கேற்றவகையில் மாற்றியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார். இந்த மாதிரியான பணிகளையே ஐக்கிய நாடுகள் சபை தற்பொழுது எங்கள் பகுதிகளில் செய்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபை அதனுடைய இளமையில் இருந்த உறுதியான போக்கை இழந்து தற்பொழுது அதன் அலுவலர்கள் நேரத்தைக் கடத்துபவர்களாகவே செயலாற்றுகின்றார்கள் என்பது மனவருத்தத்துடன் கூறப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
நாங்கள் கேட்க விரும்புகின்றோம், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் எந்தப் பிரிவின் கீழ் அரசாங்கத்தினால் நடத்தப்படும் இந்த நலன்புரி நிலையங்களில் குடும்பங்களை ஆண், பெண், குழந்தைகள் என்ற பாலியல் அடிப்படையில் பிரிக்கின்றனர். தந்தை ஒரு இடத்திலும், தாயார் இன்னொரு இடத்திலும், பிள்ளைகள் இன்னொரு இடத்திலும் பிரிக்கப்பட்டுள்ளனர். ஆண் குழந்தைகள் தகவல்களுக்காக வதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகள் கிரமமாக படை அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இடை நிறுத்தாது படை அதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவரை ஏபி (AP) செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி கணிசமானளவு பெண்கள் அநுராதபுரத்திற்கு இடமாற்றப்பட்டு அங்கு அரசாங்கத்தினால் நடத்தப்படும் விபச்சார விடுதிகளில் படை அதிகாரிகளுடைய மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றார்கள். இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை வழித்தெழிந்து அவர்களின் பொறுப்பை உணர்ந்து அரச சார்பற்ற நிறுவனங்களை இது பற்றி விசாரணை செய்யுமாறு கோரியிருக்க வேண்டும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்களைக்கொண்டு விசாரணை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவுமே செய்யப்படவில்லை.
நலன்புரிதல் என்ற சொல் சிறீலங்கா அரசாங்கத்தின் நிலையங்களில் அதற்கேற்ற பொருளுடன் பயன்படுத்தப்படுவதில்லை. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போவர் (Boer) போரின்போதும், 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும் நாசிகளாலும் நடாத்தப்பட்ட வதை முகாம்களையே இவை நினைவுபடுத்துகின்றன. நலன்புரி நிலையங்களுக்கும், முட்கம்பிச் சுருள்களுக்கும் என்ன தொடர்பு என நாங்கள் யாராவது கேட்கலாம் அல்லவா? மேலும் இந்த நலன்புரி நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள ஆண்களும், முதிய பெண்களும் படையினருக்கு கட்டாய வேலை செய்விக்கப்பட்டு அதற்காக ஒரு தட்டு உணவுகூட வழங்கப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிகாட்ட விரும்புகின்றோம்.
அரசாங்கம் தாங்கள் சுடுதிறன் பயன்படுத்தாத பாதுகாப்பு பிரதேசங்களை உருவாக்கியிருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்வது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இவைகள் கழிவு, மணல் பிரதேசமாகவும், மக்கள் குடியிருப்புக்கு தகுதியற்ற நிலங்களாகவும், எந்தவொரு பயிர்ச்செய்கையும் மேற்கொள்ள முடியாத இடங்களாக உள்ளன. இதனால் நோய்கள் தோன்றி இளம் சந்ததி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேசத்தில் ஒரு கிழமைக்கு மேல் வாழ்ந்தவர்கள் யாருமே நீண்ட நாட்களுக்கு வாழ்வார்கள் என்கின்ற நம்பிக்கை இழக்கப்பட்டுவிடும். மனிதாபிமானத் தலையீடு மூலமே இந்த மனித அழிவு தடுக்கப்படலாம் என்பதை அனைத்துலக சமூகத்திற்கு நாம் வலியுறுத்திக்கூற விரும்புகின்றோம்.
இந்தக் கணினி யுகத்தில் அனைத்துலக சமூகத்தால் ஏன் இதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பது எமக்கு விளங்காத ஒன்றாக இருக்கின்றது. திரு.ஹோல்ம்சும் அவருடைய மற்றையவர்களும் பாதுகாப்புப் பிரதேசம் என்பது பெயரளவில் மட்டும்தான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கிராமங்கள் தினமும் நெடுந்தூர சுடு கலன்களாலும் (ஆட்டிலறி), பல்குழல் எறிகணைகளாலும் வெள்ளையுர குண்டுகளாலும், மோட்டார் தாக்குதல்களாலும், கிபீர் மற்றும் மிக் வானூர்திக் குண்டு வீச்சுக்களாலும் தாக்கப்படுவது அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரதேசம் என்ற சொல் பொய்யானது என்பதை வெளிப்படுத்துகின்றது.
அரசாங்கம் புத்தியான முறையில் தினமும் கொல்லப்படும் மற்றும் காயமடையும் மக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி வெளியிட்டு அனைத்துலகின் குரல் எழாதவாறு தடுக்கின்றது. சிறீலங்கா அரசுத் தலைவர் மிக அபாயகரமான வார்த்தைகளைப் பிரகடனப்படுத்தினார். அவர் விரும்பினால் பாதுகாப்புப் பிரதேசங்களிலுள்ள மக்களை 24 மணித்தியாலங்களுக்குள் முற்றாக அழிக்கலாம் என்று கூறினார். அவர் ஏன் இன்னும் அதனைச் செய்யவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இவ்விதமான காட்டுமிராண்டித்தனங்கள் அனைத்துலக மட்டத்தில் ஏன் வெளிக்கொண்டு வரப்படவில்லை? அல்லது ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் இது குறித்து தட்டிக்கேட்கவில்லை? இந்தப் பாதுகாப்புப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் கிடங்குகளுக்குள்ளும், பதுங்ககழிகளுக்குள்ளும், சேற்றுக் குழிகளிலும் வாழ்ந்துதான் சிறீலங்கா படைகளால் செலுத்தப்படும் உயிராபத்தான ஏவுகணைகளில் இருந்து நாலு கிராமத்திலும் தப்பிப் பிழைக்கின்றனர்.
இருந்த போதிலும் சாகின்ற தொகையும், காயப்படுகின்ற தொகையும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. வியட்னாம் போரின்போது னுஆணு இலும், அதனைச் சுற்றி வாழ்ந்த மக்களும் இவ்விதமாக நிலத்துக்குக் கீழேயே வாழ்ந்தார்கள். நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் திரு.ஜோன் ஹோல்ம்ஸ் வியட்னாம் போரைப் பற்றி அறிந்தபோது இதனையும் அறிந்திருப்பார் என. அனைத்துலக சமூகம் போர் சூழலில் வாழும் மக்களின் துன்பங்களையும், வரலாற்றையும் ஒப்பிடுகின்ற உணர்வுள்ளவர்களாக இருப்பார்களேயானால் வன்னியின் நிலை தொடர அனுமதிக்க மாட்டார்கள்.
முடிவாக... இலோனியஸ் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் அனைத்துலக சட்டத்தில் பேராசிரியராக விளங்கும் பேராசிரியர் முனைவர் பொயில் (Dr.Boyle) அவர்களின் சில வார்த்தைகளுடன் இதனை முடிக்கலாம் என எண்ணுகின்றோம். "சிறீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜபக்ச, பாதுகாப்புப் பிரதேசத்தில் வாழும் 350,000 தமிழ் மக்களினதும் அனைத்துலக மனிதாய சட்டங்களின் அடிப்படையிலான பெரும்பாலான அடிப்படைத் தேவைகளை மீறி வன்முறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றார். சிறீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் அனைத்து மருத்துவர்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரையும் வன்னியில் இருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டார்.
சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சர் வன்னியில் அழிக்கப்பட வேண்டிய தமிழர்களின் பட்டியலையும் தயாரித்திருக்கின்றார். உலக அரசுகள் உடனடியாக ஆற்றலுள்ள முறையில் செயற்பட்டு சிறீலங்கா அரசாங்கத்தைத் தடுத்து நிறுத்தாது விட்டால், உலகின் சேர்பனிக்கா (Srebrenica), சப்ரா (Sabra), சற்றிலா (Shattila), றுவண்டா (Rwanda), கொசோவாவின் (Kosovo) வரிசையில் தமிழர்களும் இன அழைப்பிற்கு உள்ளாக்கப்படுவதற்கு சாட்சியம் கூற வேண்டிய நிலை ஏற்படும்.
(பேராசிரியர் பொயிலின் முழுஅளவிலான செய்தியையும் படிக்க விரும்புவர்கள் கீழுள்ள கணனி இணைப்பிற்கு சென்று படிக்கவும்)
http://tamilnet.com/art.html?catid=79&artid=28686
நன்றி
கையொப்பம் கையொப்பம் Dr. நித்தியானந்தசர்மா கோபாலகிருஸ்ணன் MA (தலைவர்) (செயலர்)
[www.sankathi.com]
Subscribe to:
Posts (Atom)